الكتاب المقدس (Van Dyke)

Tamil

Lamentations

3

1انا هو الرجل الذي رأى مذلة بقضيب سخطه.
1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
2قادني وسيرني في الظلام ولا نور.
2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
3حقا انه يعود ويرد عليّ يده اليوم كله.
3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
4ابلى لحمي وجلدي. كسر عظامي.
4என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
5بنى عليّ واحاطني بعلقم ومشقة.
5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
6اسكنني في ظلمات كموتى القدم.
6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
7سيج عليّ فلا استطيع الخروج. ثقل سلسلتي.
7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.
8ايضا حين اصرخ واستغيث يصدّ صلاتي.
8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
9سيج طرقي بحجارة منحوتة. قلب سبلي.
9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
10هو لي دب كامن اسد في مخابئ.
10அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
11ميّل طرقي ومزقني. جعلني خرابا.
11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார்.
12مدّ قوسه ونصبني كغرض للسهم.
12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
13ادخل في كيلتيّ نبال جعبته.
13தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
14صرت ضحكة لكل شعبي واغنية لهم اليوم كله.
14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன்.
15اشبعني مرائر وأرواني افسنتينا.
15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
16وجرش بالحصى اسناني. كبسني بالرماد.
16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
17وقد ابعدت عن السلام نفسي. نسيت الخير.
17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
18وقلت بادت ثقتي ورجائي من الرب.
18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
19ذكر مذلتي وتيهاني افسنتين وعلقم.
19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20ذكرا تذكر نفسي وتنحني فيّ
20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
21اردد هذا في قلبي. من اجل ذلك ارجو.
21இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன்.
22انه من احسانات الرب اننا لم نفن. لان مراحمه لا تزول.
22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23هي جديدة في كل صباح. كثيرة امانتك.
23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
24نصيبي هو الرب قالت نفسي. من اجل ذلك ارجوه.
24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
25طيب هو الرب للذين يترجونه للنفس التي تطلبه.
25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
26جيد ان ينتظر الانسان ويتوقع بسكوت خلاص الرب.
26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
27جيد للرجل ان يحمل النير في صباه.
27தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
28يجلس وحده ويسكت لانه قد وضعه عليه.
28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
29يجعل في التراب فمه لعله يوجد رجاء.
29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
30يعطي خده لضاربه. يشبع عارا.
30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
31لان السيد لا يرفض الى الابد.
31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
32فانه ولو احزن يرحم حسب كثرة مراحمه.
32அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
33لانه لا يذل من قلبه ولا يحزن بني الانسان.
33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
34ان يدوس احد تحت رجليه كل اسرى الارض
34ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
35ان يحرف حق الرجل امام وجه العلي
35உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
36ان يقلب الانسان في دعواه السيد لا يرى.
36மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
37من ذا الذي يقول فيكون والرب لم يأمر.
37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
38من فم العلي ألا تخرج الشرور والخير
38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
39لماذا يشتكي الانسان الحي الرجل من قصاص خطاياه.
39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
40لنفحص طرقنا ونمتحنها ونرجع الى الرب.
40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
41لنرفع قلوبنا وايدينا الى الله في السموات
41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
42نحن اذنبنا وعصينا. انت لم تغفر.
42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
43التحفت بالغضب وطردتنا. قتلت ولم تشفق.
43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
44التحفت بالسحاب حتى لا تنفذ الصلاة.
44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45جعلتنا وسخا وكرها في وسط الشعوب.
45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
46فتح كل اعدائنا افواههم علينا.
46எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
47صار علينا خوف ورعب هلاك وسحق.
47திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
48سكبت عيناي ينابيع ماء على سحق بنت شعبي.
48என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
49عيني تسكب ولا تكف بلا انقطاع
49கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
50حتى يشرف وينظر الرب من السماء.
50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
51عيني تؤثّر في نفسي لاجل كل بنات مدينتي.
51என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
52قد اصطادتني اعدائي كعصفور بلا سبب.
52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.
53قرضوا في الجب حياتي والقوا عليّ حجارة.
53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள்.
54طفت المياه فوق راسي. قلت قد قرضت
54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
55دعوت باسمك يا رب من الجب الاسفل.
55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
56لصوتي سمعت. لا تستر اذنك عن زفرتي عن صياحي.
56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
57دنوت يوم دعوتك. قلت لا تخف.
57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
58خاصمت يا سيد خصومات نفسي. فككت حياتي.
58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
59رأيت يا رب ظلمي. اقم دعواي.
59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
60رأيت كل نقمتهم كل افكارهم عليّ.
60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
61سمعت تعييرهم يا رب كل افكارهم عليّ
61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
62كلام مقاوميّ ومؤامرتهم عليّ اليوم كله.
62எனக்கு விரோதமா.ய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
63انظر الى جلوسهم ووقوفهم انا اغنيتهم
63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
64رد لهم جزاء يا رب حسب عمل اياديهم.
64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
65اعطهم غشاوة قلب لعنتك لهم.
65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
66اتبع بالغضب واهلكهم من تحت سموات الرب
66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.