الكتاب المقدس (Van Dyke)

Tamil

Lamentations

5

1اذكر يا رب ماذا صار لنا. اشرف وانظر الى عارنا.
1கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
2قد صار ميراثنا للغرباء. بيوتنا للاجانب.
2எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின.
3صرنا ايتاما بلا اب. امهاتنا كارامل.
3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
4شربنا ماءنا بالفضة. حطبنا بالثمن يأتي.
4எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.
5على اعناقنا نضطهد. نتعب ولا راحة لنا.
5பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
6اعطينا اليد للمصريين والاشوريين لنشبع خبزا.
6அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.
7آباؤنا اخطأوا وليسوا بموجودين ونحن نحمل آثامهم.
7எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
8عبيد حكموا علينا. ليس من يخلص من ايديهم.
8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.
9بانفسنا نأتي بخبزنا من جرى سيف البرية.
9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தை தேடுகிறோம்.
10جلودنا اسودّت كتنور من جرى نيران الجوع.
10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
11اذلوا النساء في صهيون العذارى في مدن يهوذا.
11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
12الرؤساء بايديهم يعلقون ولم تعتبر وجوه الشيوخ.
12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
13اخذوا الشبان للطحن والصبيان عثروا تحت الحطب.
13வாலிபரை எந்திரம் அரைக்கக்கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.
14كفت الشيوخ عن الباب والشبان عن غنائهم.
14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
15مضى فرح قلبنا صار رقصنا نوحا.
15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
16سقط اكليل راسنا. ويل لنا لاننا قد اخطأنا.
16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
17من اجل هذا حزن قلبنا. من اجل هذه اظلمت عيوننا.
17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
18من اجل جبل صهون الخرب. الثعالب ماشية فيه.
18பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
19انت يا رب الى الابد تجلس. كرسيك الى دور فدور.
19கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
20لماذا تنسانا الى الابد وتتركنا طول الايام.
20தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?
21ارددنا يا رب اليك فنرتد. جدد ايامنا كالقديم.
21கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
22هل كل الرفض رفضتنا هل غضبت علينا جدا
22எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!