1كالثلج في الصيف وكالمطر في الحصاد هكذا الكرامة غير لائقة بالجاهل.
1உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
2كالعصفور للفرار وكالسنونة للطيران كذلك لعنة بلا سبب لا تأتي.
2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.
3السوط للفرس واللجام للحمار والعصا لظهر الجهال.
3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
4لا تجاوب الجاهل حسب حماقته لئلا تعدله انت.
4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
5جاوب الجاهل حسب حماقته لئلا يكون حكيما في عيني نفسه.
5மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
6يقطع الرجلين يشرب ظلما من يرسل كلاما عن يد جاهل.
6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
7ساقا الاعرج متدلدلتان وكذا المثل في فم الجهال.
7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
8كصرّة حجارة كريمة في رجمة هكذا المعطي كرامة للجاهل.
8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.
9شوك مرتفع بيد سكران مثل المثل في فم الجهال.
9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
10رام يطعن الكل هكذا من يستأجر الجاهل او يستأجر المحتالين.
10பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
11كما يعود الكلب الى قيئه هكذا الجاهل يعيد حماقته.
11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
12أرأيت رجلا حكيما في عيني نفسه. الرجاء بالجاهل اكثر من الرجاء به
12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
13قال الكسلان الاسد في الطريق الشبل في الشوارع.
13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
14الباب يدور على صائره والكسلان على فراشه.
14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
15الكسلان يخفي يده في الصحفة ويشق عليه ان يردها الى فمه.
15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
16الكسلان اوفر حكمة في عيني نفسه من السبعة المجيبين بعقل.
16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
17كممسك اذني كلب هكذا من يعبر ويتعرض لمشاجرة لا تعنيه.
17வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
18مثل المجنون الذي يرمي نارا وسهاما وموتا
18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
19هكذا الرجل الخادع قريبه ويقول ألم العب انا.
19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
20بعدم الحطب تنطفئ النار وحيث لا نمّام يهدأ الخصام.
20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
21فحم للجمر وحطب للنار هكذا الرجل المخاصم لتهييج النزاع.
21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
22كلام النمّام مثل لقم حلوة فينزل الى مخادع البطن
22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
23فضة زغل تغشّي شقفة هكذا الشفتان المتوقدتان والقلب الشرير.
23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
24بشفتيه يتنكر المبغض وفي جوفه يضع غشا.
24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
25اذا حسّن صوته فلا تأتمنه. لان في قلبه سبع رجاسات.
25அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
26من يغطي بغضة بمكر يكشف خبثه بين الجماعة.
26பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
27من يحفر حفرة يسقط فيها ومن يدحرج حجرا يرجع عليه.
27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
28اللسان الكاذب يبغض منسحقيه والفم الملق يعدّ خرابا
28கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.