الكتاب المقدس (Van Dyke)

Tamil

Proverbs

29

1الكثير التوبّخ المقسي عنقه بغتة يكسر ولا شفاء.
1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
2اذا ساد الصدّيقون فرح الشعب واذا تسلط الشرير يئن الشعب.
2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
3من يحب الحكمة يفرّح اباه ورفيق الزواني يبدد مالا.
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
4الملك بالعدل يثبت الارض والقابل الهدايا يدمرها.
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
5الرجل الذي يطري صاحبه يبسط شبكة لرجليه.
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6في معصية رجل شرير شرك اما الصدّيق فيترنم ويفرح.
6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
7الصدّيق يعرف دعوى الفقراء. اما الشرير فلا يفهم معرفة.
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
8الناس المستهزئون يفتنون المدينة. اما الحكماء فيصرفون الغضب.
8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
9رجل حكيم ان حاكم رجلا احمق فان غضب وان ضحك فلا راحة.
9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10اهل الدماء يبغضون الكامل. اما المستقيمون فيسألون عن نفسه.
10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
11الجاهل يظهر كل غيظه والحكيم يسكنه اخيرا
11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
12الحاكم المصغي الى كلام كذب كل خدامه اشرار.
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
13الفقير والمربي يتلاقيان. الرب ينوّر اعين كليهما.
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.
14الملك الحاكم بالحق للفقراء يثبت كرسيه الى الابد.
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
15العصا والتوبيخ يعطيان حكمة والصبي المطلق الى هواه يخجل امه.
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
16اذا ساد الاشرار كثرت المعاصي. اما الصدّيقون فينظرون سقوطهم.
16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
17ادّب ابنك فيريحك ويعطي نفسك لذّات.
17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
18بلا رؤية يجمح الشعب. اما حافظ الشريعة فطوباه‎.
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19بالكلام لا يؤدب العبد لانه يفهم ولا يعنى.
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.
20أرأيت انسان عجولا في كلامه. الرجاء بالجاهل اكثر من الرجاء به.
20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
21من فنّق عبده من حداثته ففي آخرته يصير منونا.
21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
22الرجل الغضوب يهيج الخصام والرجل السخوط كثير المعاصي.
22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
23كبرياء الانسان تضعه والوضيع الروح ينال مجدا.
23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
24من يقاسم سارقا يبغض نفسه. يسمع اللعن ولا يقرّ.
24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
25خشية الانسان تضع شركا والمتكل على الرب يرفع.
25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26كثيرون يطلبون وجه المتسلط. اما حق الانسان فمن الرب.
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
27الرجل الظالم مكرهة الصدّيقين والمستقيم الطريق مكرهة الشرير
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.