1كلام لموئيل ملك مسّا. علّمته اياه امه.
1ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
2ماذا يا ابني ثم ماذا يا ابن رحمي ثم ماذا يا ابن نذوري ـــ
2என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
3لا تعطي حيلك للنساء ولا طرقك لمهلكات الملوك.
3ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
4ليس للملوك يا لموئيل ليس للملوك ان يشربوا خمرا ولا للعظماء المسكر.
4திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
5لئلا يشربوا وينسوا المفروض ويغيّروا حجة كل بني المذلة.
5மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
6اعطوا مسكرا لهالك وخمرا لمرّي النفس.
6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
7يشرب وينسى فقره ولا يذكر تعبه بعد
7அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
8افتح فمك لاجل الاخرس في دعوى كل يتيم.
8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
9افتح فمك. اقض بالعدل وحام عن الفقير والمسكين
9உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
10امرأة فاضلة من يجدها لان ثمنها يفوق اللآلئ.
10குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
11بها يثق قلب زوجها فلا يحتاج الى غنيمة.
11அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
12تصنع له خيرا لا شرا كل ايام حياتها.
12அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
13تطلب صوفا وكتانا وتشتغل بيدين راضيتين.
13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
14هي كسفن التاجر. تجلب طعامها من بعيد.
14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
15وتقوم اذ الليل بعد وتعطي اكلا لاهل بيتها وفريضة لفتياتها.
15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
16تتأمل حقلا فتأخذه وبثمر يديها تغرس كرما.
16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
17تنطّق حقويها بالقوة وتشدد ذراعيها.
17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
18تشعر ان تجارتها جيدة. سراجها لا ينطفئ في الليل.
18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
19تمد يديها الى المغزل وتمسك كفّاها بالفلكة.
19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
20تبسط كفيها للفقير وتمد يديها الى المسكين.
20சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
21لا تخشى على بيتها من الثلج لان كل اهل بيتها لابسون حللا.
21தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
22تعمل لنفسها موشيات. لبسها بوص وارجوان.
22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
23زوجها معروف في الابواب حين يجلس بين مشايخ الارض.
23அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
24تصنع قمصانا وتبيعها وتعرض مناطق على الكنعاني.
24மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
25العزّ والبهاء لباسها وتضحك على الزمن الآتي.
25அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
26تفتح فمها بالحكمة وفي لسانها سنّة المعروف.
26தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
27تراقب طرق اهل بيتها ولا تأكل خبز الكسل.
27அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
28يقوم اولادها ويطوّبونها. زوجها ايضا فيمدحها.
28அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
29بنات كثيرات عملن فضلا اما انت ففقت عليهنّ جميعا.
29அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
30الحسن غش والجمال باطل. اما المرأة المتقية الرب فهي تمدح.
30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
31اعطوها من ثمر يديها ولتمدحها اعمالها في الابواب
31அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.