الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

101

1لداود. مزمور‎. ‎رحمة وحكما اغني. لك يا رب ارنم‎.
1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
2‎اتعقل في طريق كامل. متى تاتي اليّ. اسلك في كمال قلبي في وسط بيتي‎.
2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
3‎لا اضع قدام عينيّ امرا رديئا عمل الزيغان ابغضت. لا يلصق بي.
3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
4قلب معوج يبعد عني. الشرير لا اعرفه‎.
4மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
5‎الذي يغتاب صاحبه سرا هذا اقطعه. مستكبر العين ومنتفخ القلب لا احتمله‎.
5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
6‎عيناي على امناء الارض لكي اجلسهم معي. السالك طريقا كاملا هو يخدمني‎.
6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.
7‎لا يسكن وسط بيتي عامل غش. المتكلم بالكذب لا يثبت امام عينيّ.
7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
8باكرا ابيد جميع اشرار الارض لاقطع من مدينة الرب كل فاعلي الاثم
8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.