الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

103

1لداود‎. ‎باركي يا نفسي الرب وكل ما في باطني ليبارك اسمه القدوس‎.
1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
2‎باركي يا نفسي الرب ولا تنسي كل حسناته‎.
2என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
3‎الذي يغفر جميع ذنوبك الذي يشفي كل امراضك
3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
4الذي يفدي من الحفرة حياتك الذي يكللك بالرحمة والرأفة
4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5الذي يشبع بالخير عمرك فيتجدد مثل النسر شبابك
5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
6الرب مجري العدل والقضاء لجميع المظلومين‎.
6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
7‎عرف موسى طرقه وبني اسرائيل افعاله‎.
7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
8‎الرب رحيم ورؤوف طويل الروح وكثير الرحمة‎.
8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9‎لا يحاكم الى الابد ولا يحقد الى الدهر‏‎.
9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
10‎لم يصنع معنا حسب خطايانا ولم يجازنا حسب آثامنا‎.
10அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11‎لانه مثل ارتفاع السموات فوق الارض قويت رحمته على خائفيه‎.
11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
12‎كبعد المشرق من المغرب ابعد عنا معاصينا
12மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13كما يترأف الاب على البنين يترأف الرب على خائفيه‎.
13தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14‎لانه يعرف جبلتنا. يذكر اننا تراب نحن‎.
14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15‎الانسان مثل العشب ايامه. كزهر الحقل كذلك يزهر‎.
15மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
16‎لان ريحا تعبر عليه فلا يكون ولا يعرفه موضعه بعد‎.
16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17‎اما رحمة الرب فالى الدهر والابد على خائفيه وعدله على بني البنين
17கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
18لحافظي عهده وذاكري وصاياه ليعملوها
18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19الرب في السموات ثبت كرسيه ومملكته على الكل تسود‎.
19கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
20‎باركوا الرب يا ملائكته المقتدرين قوة الفاعلين امره عند سماع صوت كلامه‎.
20கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
21‎باركوا الرب يا جميع جنوده خدامه العاملين مرضاته‎.
21கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
22‎باركوا الرب يا جميع اعماله في كل مواضع سلطانه باركي يا نفسي الرب
22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.