1تسبيحة. مزمور لداود. ثابت قلبي يا الله اغني وارنم. كذلك مجدي.
1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
2استيقظي ايتها الرباب والعود انا استيقظ سحرا.
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
3احمدك بين الشعوب يا رب وارنم لك بين الامم.
3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
4لان رحمتك قد عظمت فوق السموات والى الغمام حقك.
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
5ارتفع اللهم على السموات وليرتفع على كل الارض مجدك.
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6لكي ينجو احباؤك. خلص بيمينك واستجب لي
6உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
7الله قد تكلم بقدسه. ابتهج اقسم شكيم واقيس وادي سكوت.
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8لي جلعاد لي منسّى. افرايم خوذة راسي. يهوذا صولجاني.
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
9موآب مرحضتي. على ادوم اطرح نعلي. يا فلسطين اهتفي عليّ
9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10من يقودني الى المدينة المحصّنة. من يهديني الى ادوم.
10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11أليس انت يا الله الذي رفضتنا ولا تخرج يا الله مع جيوشنا.
11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
12اعطنا عونا في الضيق فباطل هو خلاص الانسان.
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
13بالله نصنع بباس وهو يدوس اعداءنا
13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.