الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

114

1عند خروج اسرائيل من مصر وبيت يعقوب من شعب أعجم
1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,
2كان يهوذا مقدسه. واسرائيل محل سلطانه‎.
2யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்யமுமாயிற்று.
3‎البحر رآه فهرب. الاردن رجع الى خلف‎.
3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4‎الجبال قفزت مثل الكباش والآكام مثل حملان الغنم‎.
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5‎ما لك ايها البحر قد هربت وما لك ايها الاردن قد رجعت الى خلف
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
6وما لكن ايتها الجبال قد قفزتنّ مثل الكباش وايتها التلال مثل حملان الغنم‎.
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7‎ايتها الارض تزلزلي من قدام الرب من قدام اله يعقوب
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8المحول الصخرة الى غدران مياه الصوان الى ينابيع مياه
8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.