1لامام المغنين. مزمور لداود. يا رب بقوتك يفرح الملك وبخلاصك كيف لا يبتهج جدا.
1கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
2شهوة قلبه اعطيته وملتمس شفتيه لم تمنعه. سلاه.
2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா)
3لانك تتقدمه ببركات خير. وضعت على راسه تاجا من ابريز.
3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
4حياة سألك فاعطيته. طول الايام الى الدهر والابد.
4அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
5عظيم مجده بخلاصك جلالا وبهاء تضع عليه.
5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
6لانك جعلته بركات الى الابد. تفرّحه ابتهاجا امامك.
6அவரை நித்திய ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருளுகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7لان الملك يتوكل على الرب. وبنعمة العلي لا يتزعزع
7ஏனெனில் இராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
8تصيب يدك جميع اعدائك. يمينك تصيب كل مبغضيك.
8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9تجعلهم مثل تنور نار في زمان حضورك. الرب بسخطه يبتلعهم وتاكلهم النار.
9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
10تبيد ثمرهم من الارض وذريتهم من بين بني آدم.
10அவர்கள் கனியை பூமியிலிருந்தும் அவர்கள் வித்தை மனுபுத்திரரிலிருந்தும் ஒழிப்பீர்.
11لانهم نصبوا عليك شرا. تفكروا بمكيدة. لم يستطيعوها.
11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
12لانك تجعلهم يتولون. تفوّق السهام على اوتارك تلقاء وجوههم.
12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்கிறீர்.
13ارتفع يا رب بقوتك. نرنم وننغم بجبروتك
13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம்.