الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

47

1لامام المغنين. لبني قورح. مزمور‎. ‎يا جميع الامم صفقوا بالايادي. اهتفوا لله بصوت الابتهاج‎.
1சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
2‎لان الرب علي. مخوف ملك كبير على كل الارض‎.
2உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
3‎يخضع الشعوب تحتنا والامم تحت اقدامنا‎.
3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4‎يختار لنا نصيبنا فخر يعقوب الذي احبه. سلاه
4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா)
5صعد الله بهتاف الرب بصوت الصور‎.
5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
6‎رنموا لله رنموا. رنموا لملكنا رنموا‎.
6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
7‎لان الله ملك الارض كلها رنموا قصيدة‎.
7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
8‎ملك الله على الامم. الله جلس على كرسي قدسه‎.
8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
9‎شرفاء الشعوب اجتمعوا. شعب اله ابراهيم. لان لله مجان الارض‎. ‎هو متعال جدا
9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.