الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

58

1لامام المغنين. على لا تهلك. لداود. مذهبة‎. ‎أحقا بالحق الاخرس تتكلمون بالمستقيمات تقضون يا بني آدم‎.
1மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
2‎بل بالقلب تعملون شرورا في الارض ظلم ايديكم تزنون‎.
2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
3‎زاغ الاشرار من الرحم ضلّوا من البطن متكلمين كذبا‎.
3துன்மார்க்கர் கர்ப்பத்திலே உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
4‎لهم حمة مثل حمة الحيّة. مثل الصلّ الاصم يسد اذنه
4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
5الذي لا يستمع الى صوت الحواة الراقين رقى حكيم
5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
6اللهم كسّر اسنانهم في افواههم. اهشم اضراس الاشبال يا رب‎.
6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
7‎ليذوبوا كالماء ليذهبوا. اذا فوّق سهامه فلتنب‎.
7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
8‎كما يذوب الحلزون ماشيا. مثل سقط المرأة لا يعاينوا الشمس‎.
8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.
9‎قبل ان تشعر قدوركم بالشوك نيئا او محروقا يجرفهم‎.
9முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
10‎يفرح الصدّيق اذ راى النقمة. يغسل خطواته بدم الشرير‎.
10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11‎ويقول الانسان ان للصديق ثمرا. انه يوجد اله قاض في الارض
11அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.