الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

86

1صلاة لداود‎. ‎امل يا رب اذنك. استجب لي. لاني مسكين وبائس انا‎.
1கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
2‎احفظ نفسي لاني تقي. يا الهي خلص انت عبدك المتكل عليك‏‎.
2என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3‎ارحمني يا رب لانني اليك اصرخ اليوم كله‎.
3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4‎فرح نفس عبدك لانني اليك يا رب ارفع نفسي‎.
4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5‎لانك انت يا رب صالح وغفور وكثير الرحمة لكل الداعين اليك
5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
6اصغ يا رب الى صلاتي وانصت الى صوت تضرعاتي‎.
6கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
7‎في يوم ضيقي ادعوك لانك تستجيب لي‎.
7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8‎لا مثل لك بين الآلهة يا رب ولا مثل اعمالك‎.
8ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
9‎كل الامم الذين صنعتهم ياتون ويسجدون امامك يا رب ويمجدون اسمك
9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
10لانك عظيم انت وصانع عجائب. انت الله وحدك
10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11علمني يا رب طريقك اسلك في حقك. وحد قلبي لخوف اسمك‎.
11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12‎احمدك يا رب الهي من كل قلبي وامجد اسمك الى الدهر‏‎.
12என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13‎لان رحمتك عظيمة نحوي وقد نجيت نفسي من الهاوية السفلى
13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14اللهم المتكبرون قد قاموا عليّ وجماعة العتاة طلبوا نفسي ولم يجعلوك امامهم‎.
14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
15‎اما انت يا رب فاله رحيم ورؤوف طويل الروح وكثير الرحمة والحق
15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16التفت اليّ وارحمني. اعط عبدك قوتك وخلص ابن امتك‎.
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
17‎اصنع معي آية للخير فيرى ذلك مبغضيّ فيخزوا لانك انت يا رب اعنتني وعزيتني
17கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.