1Nämä ovat israelilaisten pysähdyspaikat siitä alkaen, kun he Mooseksen ja Aaronin johtamina lähtivät kaikkine joukkoineen Egyptistä.
1மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:
2Joka kerta, kun israelilaiset lähtivät liikkeelle leiripaikastaan, Mooses kirjoitti Herran käskystä muistiin paikan nimen. Tässä on luettelo heidän leiripaikoistaan.
2மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
3Israelilaiset lähtivät Ramseksesta ensimmäisen kuun viidentenätoista päivänä. He lähtivät pääsiäisen jälkeisenä päivänä Herran johdolla matkaan kaikkien egyptiläisten nähden.
3முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
4Egyptiläiset olivat juuri hautaamassa esikoisiaan. Herra oli ne surmannut ja näin antanut tuomionsa kohdata egyptiläisten jumalia.
4அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின் பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
5Ramseksesta israelilaiset siirtyivät Sukkotiin ja leiriytyivät sinne.
5பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
6Sukkotin jälkeen he leiriytyivät Etamiin, autiomaan laitaan.
6சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
7Lähdettyään Etamista he palasivat Pi-Hirotiin, joka on vastapäätä Baal-Sefonia, ja leiriytyivät Migdolin luo.
7ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
8Pi-Hirotin luota lähdettyään he kulkivat meren poikki autiomaahan, vaelsivat kolmen päivän matkan Etamin autiomaassa ja leiriytyivät Maraan.
8ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
9Marasta he siirtyivät Elimiin. Elimissä oli kaksitoista lähdettä ja seitsemänkymmentä palmua, ja he leiriytyivät sinne.
9மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.
10Heidän seuraava leiripaikkansa Elimin jälkeen oli Kaislameren rannalla.
10ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.
11Kaislamereltä he siirtyivät Sinin autiomaahan ja leiriytyivät sinne.
11சிவந்த சமுத்திரத்தை விட்டுப் பறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
12Sinin autiomaan jälkeen he leiriytyivät Dofkaan.
12சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.
13Dofkan jälkeen he leiriytyivät Alusiin,
13தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.
14Alusin jälkeen Refidimiin, mutta siellä ei ollut vettä kansan juotavaksi.
14ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
15Refidimistä he menivät Siinain autiomaahan ja leiriytyivät sinne.
15ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
16Siinain autiomaan jälkeen he leiriytyivät Kibrot-Taavaan,
16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
17Kibrot-Taavan jälkeen Haserotiin,
17கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
18Haserotin jälkeen Ritmaan,
18ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.
19Ritman jälkeen Rimmon-Peresiin,
19ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
20Rimmon-Peresin jälkeen Libnaan,
20ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.
21Libnan jälkeen Rissaan,
21லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.
22Rissan jälkeen Kehelataan,
22ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
23Kehelatan jälkeen Seferinvuoren luo.
23கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளமிறங்கினார்கள்.
24Seferinvuoren luota he siirtyivät Haradaan ja leiriytyivät sinne.
24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
25Haradan jälkeen he leiriytyivät Makhelotiin,
25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
26Makhelotin jälkeen Tahatiin,
26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
27Tahatin jälkeen Terahiin,
27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
28Terahin jälkeen Mitkaan,
28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள்.
29Mitkan jälkeen Hasmonaan,
29மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
30Hasmonan jälkeen Moserotiin,
30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
31Moserotin jälkeen Bene- Jaakaniin,
31மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
32Bene-Jaakanin jälkeen Hor-Gidgadiin,
32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
33Hor-Gidgadin jälkeen Jotbataan,
33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
34Jotbatan jälkeen Abronaan,
34யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
35Abronan jälkeen Esjon-Geberiin,
35எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
36Esjon-Geberin jälkeen Sinin autiomaahan Kadesiin.
36எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
37Kadesista he siirtyivät Horinvuoren luo Edomin maan rajalle ja leiriytyivät sinne.
37காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
38Pappi Aaron nousi Herran käskystä Horinvuorelle, ja siellä hän kuoli. Tämä tapahtui neljäkymmentä vuotta israelilaisten Egyptistä lähdön jälkeen, viidennen kuun ensimmäisenä päivänä.
38அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
39Kuollessaan Horinvuorella Aaron oli sadankahdenkymmenenkolmen vuoden ikäinen.
39ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.
40Kanaanilainen Aradin kuningas, joka asui Negevissä, Kanaaninmaan eteläosassa, sai tuolloin tietää, että israelilaiset olivat lähestymässä.
40அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
41Horinvuoren luota lähdettyään israelilaiset kulkivat Salmonaan, jonne he leiriytyivät.
41ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
42Salmonan jälkeen he leiriytyivät Punoniin,
42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
43sitten Obotiin
43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
44ja sitten Ijje-Abarimiin Moabin maan rajalle.
44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
45Ijje-Abarimin jälkeen he leiriytyivät Dibon-Gadiin,
45அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
46sitten Almon- Diblataimiin
46தீபோன்காத்திலிருந்து புறப்புட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே பாளயமிறங்கினார்கள்.
47ja sitten Abarimin vuorille vastapäätä Neboa.
47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
48Abarimin vuorilta lähdettyään israelilaiset siirtyivät Moabin tasangolle Jordanin varrelle vastapäätä Jerikoa ja leiriytyivät sinne.
48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
49Heidän leirialueensa ulottui Bet-Jesimotista Abel-Sittimiin.
49யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
50Moabin tasangolla Jordanin varrella vastapäätä Jerikoa Herra sanoi Moosekselle:
50எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
51"Sano israelilaisille: Kun olette menneet Jordanin yli Kanaaninmaahan,
51நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
52hävittäkää tieltänne kaikki sen maan asukkaat. Hävittäkää heidän kiveen veistetyt epäjumalansa, samoin kaikki heidän valetut jumalankuvansa, ja tuhotkaa heidän uhrikukkulansa.
52அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53Ottakaa maa haltuunne ja asettukaa sinne asumaan, sillä minä annan sen teidän omaksenne.
53தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
54Jakakaa maa suvuittain keskenänne ja toimittakaa jako arpomalla. Mitä suurempi suku on, sitä enemmän teidän on annettava sille maata, mitä pienempi se on, sitä vähemmän. Kunkin suvun tulee saada osuutensa sieltä mistä arpa määrää. Jakakaa maa heimoittain ja suvuittain.
54சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
55Mutta ellette hävitä maan asukkaita tieltänne, niin ne, joiden annatte jäädä jäljelle, pistävät teitä piikkeinä silmiin ja okaina kylkiin, ja he ahdistavat teitä siinä maassa, jossa asutte.
55நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
56Ja sen, minkä olin aikonut tehdä heille, minä teenkin teille."
56அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.