Hebrew: Modern

Tamil

2 Corinthians

6

1ואנחנו כעזרים נזהירה אתכם שלא תקבלו לריק את חסד אלהים׃
1தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2כי הוא אומר בעת רצון עניתיך וביום ישועה עזרתיך הנה עתה עת רצון הנה עתה יום ישועה׃
2அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
3ואין אנחנו נתנים מכשול במאומה פן יהיה שרותנו לנאצה׃
3இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
4כי אם נראה בכל דבר כמשרתי אלהים בסבלנות רבה בלחץ ובצרות ובמצוקות׃
4மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
5במכות ובמוסרות ובמהומות בתלאות בשקידות ובצומות׃
5அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6בטהרה ובדעת ובארך רוח ובחסד וברוח הקדש ובאהבה לא צבועה׃
6கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,
7בדבר האמת ובגבורת אלהים בכלי נשק הצדקה מימין ומשמאל׃
7சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
8בכבוד ובקלון בשם רע ובשם טוב כמתעים ובכל זאת נאמנים׃
8கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,
9כאינם ידועים וגם ידועים כמתים והננו חיים כמיסרים ולא מומתים׃
9அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
10כנעצבים ובכל עת שמחים כרשים ומעשירי רבים כאשר אין להם מאומה ויש להם כל׃
10துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
11פינו פתוח לכם אנשי קורנתוס ורחב לבנו׃
11கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.
12לא צר מקומכם בנו אך צר המקום במעיכם׃
12எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
13והיה זה גמולי כמו אל בנים אנכי מדבר אם תרחיבו לבבכם גם אתם׃
13ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14אל תהיו משכי על זר עם חסרי אמונה כי אי זה שתפות יש לצדקה עם העול ואי זה התחברות לאור עם החשך׃
14அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15ואי זה הסכמה למשיח עם בליאל או מה חלק המאמין עם שאיננו מאמין׃
15கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16ואי זה דבק יש להיכל אלהים עם האלילים כי אתם היכל אלהים חיים כמו שאמר האלהים ושכנתי והתהלכתי בתוכם והייתי להם לאלהים והם יהיו לי לעם׃
16தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
17על כן צאו מתוכם והברו נאם יהוה וטמא אל תגעו ואני אקבץ אתכם׃
17ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18והייתי לכם לאב ואתם תהיו לי לבנים ולבנות נאם יהוה צבאות׃
18அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.