1וששת ימים לפני חג הפסח בא ישוע לבית היני מקום לעזר אשר העיר אתו מעם המתים׃
1பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
2ויעשו לו שם משתה בערב ומרתא משרתת ולעזר היה אחד מן המסבים אתו׃
2அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
3ותקח מרים מרקחת נרד זך ויקר מאד לטרא אחת משקלה ותמשח בה את רגלי ישוע ותנגב את רגליו בשערותיה והבית ימלא ריח המרקחת׃
3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
4ויאמר אחד מתלמידיו הוא יהודה בן שמעון איש קריות העתיד למסרו׃
4அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
5מדוע לא נמכרה המרקחת בשלש מאות דינר ונתן לעניים׃
5இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
6והוא לא דבר את זאת מחמלתו על העניים כי אם גנב היה וכיס הכסף אתו וישא כל אשר ישימו בו׃
6அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
7ויאמר ישוע הניחה לה ליום קבורתי צפנה זאת׃
7அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
8כי העניים תמיד המה עמכם ואני אינני תמיד עמכם׃
8தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
9וישמעו עם רב ביהודה כי שם הוא ויבאו לא בעבור ישוע לבדו כי אם לראות גם את לעזר אשר העירו מעם המתים׃
9அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
10וראשי הכהנים התיעצו להרג גם את לעזר׃
10லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால்,
11כי בגללו באו שמה רבים מן היהודים ויאמינו בישוע׃
11பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
12ויהי ממחרת כשמוע המון רב אשר באו לחג החג כי יבא ישוע ירושלים׃
12மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
13ויקחו בידם כפות תמרים ויצאו לקראתו ויריעו לאמר הושע נא ברוך הבא בשם יהוה מלך ישראל׃
13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
14וימצא ישוע עיר אחד וירכב עליו כאשר כתוב׃
14அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
15אל תיראי בת ציון הנה מלכך יבוא לך רכב על עיר בן אתנות׃
15இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
16וכל זאת לא הבינו תלמידיו בראשונה אך אחרי אשר נתפאר ישוע זכרו כי כן כתוב עליו וכי זאת עשו לו׃
16இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
17ויעידו העם אשר היו אצלו בקראו אל לעזר לצאת מן הקבר ויער אתו מעם המתים׃
17அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
18על זאת גם המון העם יצא לקראתו על שמעם כי עשה האות הזה׃
18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
19והפרושים דברו איש את אחיו לאמר הראיתם כי הועיל לא תועילו מאומה הנה כל העולם נמשך אחריו׃
19அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
20ובתוך העלים להשתחות בחג היו אנשים יונים׃
20பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
21ויקרבו אל פילפוס איש בית צידה אשר בארץ הגליל וישאלו ממנו לאמר אדני לראות את ישוע חפצנו׃
21அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
22ויבא פילפוס ויגד זאת אל אנדרי ואנדרי ופילפוס הגידו אל ישוע׃
22பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
23ויען אותם ישוע ויאמר באה השעה שיפאר בן האדם׃
23அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
24אמן אמן אני אמר לכם אם לא יפל גרגר החטא אל תוך האדמה ומת ישאר לבדו וכאשר מת יעשה פרי הרבה׃
24மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
25האהב את נפשו יאבדנה והשנא את נפשו בעולם הזה ינצרה לחיי נצח׃
25தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
26החפץ לשרתני ילך אחרי ובאשר אהיה שם יהיה גם משרתי ואיש אשר ישרתני אתו יכבד אבי׃
26ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
27עתה נבהלה נפשי ומה אמר הושיעני אבי מן השעה הזאת אך על כן באתי אל השעה הזאת׃
27இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
28אבי פאר את שמך ותצא בת קול מן השמים גם פארתי וגם אוסיף לפאר׃
28பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
29והעם העמדים שמה כשמעם אמרו רעם נשמע ואחרים אמרו מלאך דבר אתו׃
29அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
30ויען ישוע ויאמר לא למעני היה הקול הזה כי אם למענכם׃
30இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
31עתה משפט בא על העולם הזה עתה ישלך שר העולם הזה חוצה׃
31இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
32ואני בהנשאי מעל הארץ אמשך כלם אלי׃
32நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
33וזאת דבר לרמוז אי זה מות הוא עתיד למות׃
33தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
34ויענו אתו העם ויאמרו הנה שמענו בתורה כי המשיח יכון לעולם ואיך אמרת כי בן האדם צריך להנשא ומי בן האדם הלזה׃
34ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
35ויאמר אליהם ישוע אך למצער יהיה האור עמכם התהלכו בעוד לכם האור פן ישופכם חשך וההלך בחשך לא ידע אנה הוא הלך׃
35அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
36בעוד לכם האור האמינו באור למען תהיו בני האור את הדברים האלה דבר ישוע וילך לו ויסתר מפניהם׃
36ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
37רבים האתות אשר עשה לעיניהם ובכל זאת לא האמינו בו׃
37அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
38למלאת דבר ישעיהו הנביא אשר אמר יהוה מי האמין לשמעתנו וזרוע יהוה על מי נגלתה׃
38கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
39על כן לא יכלו להאמין כי עוד אמר ישעיהו׃
39ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
40השע עיניהם והשמין לבבם פן יראו בעיניהם ולבבם יבין ושבו ורפאתי להם׃
40அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
41כזאת דבר ישעיהו בראותו את תפארתו וינבא עליו׃
41ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
42אולם רבים אף מן השרים האמינו בו אך בגלל הפרושים לא הודו למען אשר לא ינדו׃
42ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
43כי אהבו כבוד אנשים יותר מכבוד האלהים׃
43அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
44ויקרא ישוע ויאמר המאמין בי לא בי הוא מאמין כי אם בשלח אתי׃
44அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
45והראה אתי את אשר שלחני הוא ראה׃
45என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
46אני באתי לאור אל העולם למען כל אשר יאמין בי לא ישב בחשך׃
46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
47והשמע את דברי ולא ישמרם אני לא אשפט אתו כי לא באתי לשפט את העולם כי אם להושיע את העולם׃
47ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
48ואיש אשר יבזני ולא יקח אמרי יש אחד אשר ידין אתו הדבר אשר דברתי הוא ידין אתו ביום האחרון׃
48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
49כי אני לא מלבי דברתי כי אם אבי השלח אתי הוא צוני את אשר אמר ואת אשר אדבר׃
49நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50ואני ידעתי כי מצותו חיי עולם לכן כל אשר אדבר כאשר אמר אלי אבי כן אני מדבר׃
50அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.