1וישכימו ראשי הכהנים עם הזקנים והסופרים וכל הסנהדרין בבקר ויתיעצו ויאסרו את ישוע ויוליכהו משם וימסרהו אל פילטוס׃
1பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
2וישאל אותו פילטוס האתה מלך היהודים ויען ויאמר אליו אתה אמרת׃
2பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3וראשי הכהנים הרבו לשטנו׃
3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
4ויוסף פילטוס וישאלהו לאמר האינך משיב דבר ראה כמה הם מעידים בך׃
4அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5וישוע לא השיב עוד אף דבר אחד ויתמה פילטוס׃
5இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6ובכל חג היה דרכו לפטר להם אסיר אחד את אשר יבקשו׃
6காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
7ויהי איש הנקרא בשם בר אבא אסור עם המורדים אשר רצחו רצח בעת המרד׃
7கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
8וישא ההמון את קולו ויחלו לבקש שיעשה להם כפעם בפעם׃
8ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
9ויען אתם פילטוס ויאמר התחפצו כי אפטר לכם את מלך היהודים׃
9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.
10כי ידע אשר רק מקנאה מסרוהו ראשי הכהנים׃
10அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
11וראשי הכהנים הסיתו את ההמון לבלתי פטר להם כי אם בר אבא׃
11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
12ויסף פילטוס ויען ויאמר להם ומה אפוא חפצתם ואעשה לאשר אתם קראים מלך היהודים׃
12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
13ויוסיפו לצעק הצלב אותו׃
13அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14ויאמר אליהם פילטוס מה אפוא עשה רעה והם הרבו עוד לצעק הצלב אותו׃
14அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15ויואל פילטוס לעשות כרצון העם ויפטר להם את בר אבא ואת ישוע הכה בשוטים וימסר אותו להצלב׃
15அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16ויוליכהו אנשי הצלב אל החצר הפנימית הוא בית המשפט ויזעיקו את כל הגדוד׃
16அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
17וילבישהו ארגמן וישרגו עטרת קצים ויעטרהו׃
17சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
18ויחלו לברכו לאמר שלום לך מלך היהודים׃
18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19ויכו על ראשו בקנה וירקו בו ויכרעו על ברכיהם וישתחוו לו׃
19அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20ואחרי התלוצצם בו הפשיטו אותו את הארגמן וילבישהו את בגדיו ויוציאהו לצלב אותו׃
20அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21ויאנסו איש עבר אחד הבא מן השדה ושמו שמעון הקוריני אבי אלכסנדרוס ורופוס לשאת את צלבו׃
21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
22ויביאהו אל מקום גלגלתא הוא מקום הגלגלת׃
22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
23ויתנו לו יין מזוג במר והוא לא קבל׃
23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24ויהי כאשר צלבו אותו ויחלקו בגדיו להם בהפילם עליהם גורל מה יקח איש איש׃
24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
25ותהי השעה השלישית ויצלבהו׃
25அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
26ומכתב דבר אשמתו כתוב למעלה מלך היהודים׃
26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
27ויצלבו אתו שני פריצים אחד לימינו ואחד לשמאלו׃
27அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28וימלא הכתוב האמר ואת פשעים נמנה׃
28அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.
29והעברים גדפו אותו ויניעו ראשם לאמר האח אתה ההורס את ההיכל ובונה אותו בשלשת ימים׃
29அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.
30הושע את עצמך ורדה מן הצלב׃
30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
31וכן לעגו לו גם ראשי הכהנים עם הסופרים באמרם איש אל רעהו את אחרים הושיע ואת עצמו לא יוכל להושיע׃
31அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.
32המשיח מלך ישראל ירד נא מן הצלב למען נראה ונאמין וגם הנצלבים אתו חרפוהו׃
32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
33ובהיות השעה הששית היה חשך על כל הארץ עד השעה התשיעית׃
33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
34ובשעה התשיעית ויצעק ישוע בקול גדול אלהי אלהי למה שבקתני אשר פרושו אלי אלי למה עזבתני׃
34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
35ומקצת העמדים אצלו בשמעם את זאת אמרו הנה אל אליהו הוא קורא׃
35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36וירץ אחד מהם וימלא ספוג חמץ וישם על קנה וישקהו ויאמר הניחו ונראה אם יבא אליהו להורידו׃
36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான்.
37וישוע נתן קול גדול ויפח את נפשו׃
37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
38ופרכת ההיכל נקרעה לשנים קרעים מלמעלה למטה׃
38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39וירא שר המאה העמד לנגדו כי בזעקו כן נפח את נפשו ויאמר אכן האיש הזה היה בן האלהים׃
39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
40וגם נשים היו שם ראות מרחוק ובתוכן גם מרים המגדלית ומרים אמו של יעקב הצעיר ושל יוסי ושלמית׃
40சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
41אשר גם הלכו אחריו ושרתהו בהיותו בגליל ואחרות רבות אשר עלו אתו ירושלים׃
41அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
42ועת הערב הגיע ומפני אשר ערב שבת היה הוא היום שלפני השבת׃
42ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது.
43ויבא יוסף הרמתי יועץ נכבד אשר היה מחכה גם הוא למלכות האלהים ויתחזק ויבא אל פילטוס וישאל את גופת ישוע׃
43கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44ויתמה פילטוס על אשר הוא כבר מת ויקרא אל שר המאה וישאלהו הגוע כבר׃
44அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
45וידע מפי שר המאה כי כן ויתן את גופתו מתנה ליוסף׃
45நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
46והוא קנה סדין ויורד אתו ויכרכהו בסדין וישימהו בקבר חצוב בסלע ויגל אבן על פתח הקבר׃
46அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
47ומרים המגדלית ומרים אם יוסי היו ראות את המקום אשר הושם שמה׃
47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.