1לכן אם יש תוכחה במשיח אם תנחומות האהבה אם התחברות הרוח אם רחמים וחמלה׃
1ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
2השלימו נא את שמחתי בהיות לכם לב אחד ואהבה אחת ונפש אחת ורצון אחד׃
2நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
3ולא תעשו דבר בדרך מריבה או כבוד שוא כי אם בשפלות רוח תחשבו איש את רעהו יותר מעצמו׃
3ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
4כל אחד אל ידאג לאשר לו לבדו כי אם גם לאשר לחברו׃
4அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
5כי הרוח ההיא אשר היתה במשיח תהי גם בכם׃
5கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
6אשר אף כי היה בדמות האלהים לא חשב לו לשלל היותו שוה לאלהים׃
6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7כי אם הפשיט את עצמו וילבש דמות עבד וידמה לבני אדם וימצא בתכונתו כבן אדם׃
7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
8וישפל את נפשו ויכנע עד מות עד מיתת הצליבה׃
8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9על כן גם האלהים הגביהו מאד ויתן לו שם נעלה על כל שם׃
9ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10למען אשר בשם ישוע תכרע כל ברך אשר בשמים ובארץ ומתחת לארץ׃
10இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11וכל לשון תודה כי אדון הוא ישוע המשיח לכבוד אלהים האב׃
11பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
12לכן חביבי כאשר שמעתם לי בכל עת כן לא לבד בהיותי עמכם כי עוד יתר עתה אשר אני רחוק מכם תיגעו בתשועת נפשתיכם ביראה וברעדה׃
12ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13כי האלהים הוא הפעל בכם גם לחפץ גם לפעל כפי רצונו׃
13ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
14עשו כל דבר בלא תלנות ובלא מזמות׃
14நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
15למען תהיו נקיים וטהורים בני אלהים לא מום בם בתוך דור עקש ופתלתל אשר תאירו ביניהם כמאורת בעולם׃
15கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
16מחזיקים בדבר החיים לתהלה לי ביום המשיח אשר לא לחנם רצתי ולא לריק יגעתי׃
16எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
17אבל אם גם אסך על זבח אמונתכם ועבודתה הנני שמח וגם שש עם כלכם׃
17மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.
18וככה שמחו אף אתם ושישו עמדי׃
18இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.
19וקויתי בישוע אדנינו לשלח במהרה אליכם את טימותיוס למען תנוח דעתי בהודע לי דבר מעמדכם׃
19அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
20כי זולתו אין אתי איש כלבבי אשר בלב שלם ידאג לכם׃
20அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
21כי כלם את אשר להם ידרשו ולא את אשר לישוע המשיח׃
21மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
22ואותו ידעתם כי בחון הוא אשר כבן העבד את אביו כן היה אתי בעבודת הבשורה׃
22தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
23ואתו אקוה לשלח אליכם מהר כאשר אראה מה יהיה לי׃
23ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.
24ובטחתי באדנינו אשר גם אנכי אבוא אליכם במהרה׃
24அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
25ואחשב מן הצרך לשלח אליכם את אפפרודיטוס אחי ועזרי וחברי בצבא והוא שליחכם ומשרתי בצרכי׃
25மேலும், என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
26יען היותו נכסף לכלכם ונעצב מאד על אשר שמעתם כי חלה׃
26அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
27אמנם חלה חלה וגם נטה למות אבל האלהים רחם עליו ולא עליו בלבד כי גם עלי רחם שלא יבוא עלי יגון על יגון׃
27அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
28לכן מהרתי לשלחו אליכם למען תראהו ותשובו לשמוח וגם ימעט יגוני׃
28ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.
29על כן קבלהו באדנינו בכל שמחה והוקירוט אנשים כמהו׃
29ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.
30כי בעבור מעשה המשיח הגיע עד מות ותקל נפשו בעיניו למען ימלא את אשר חסרתם בשרתכם אותי׃
30ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.