Tamil

聖經新譯本 (Simplified)

Hosea

1

1யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
1何西阿与歌玛象征性的婚姻
2கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
2耶和华初次借着何西阿说话。耶和华对何西阿说:“你去娶一个像娼妓一样的女人,生养像娼妓一样的儿女,因为这地盛行淫乱,离开了耶和华。”
3அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
3三个儿女的象征于是他就去娶了滴拉音的女儿歌玛。后来,她怀了孕,给他生了一个儿子。
4அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.
4耶和华就对何西阿说:“给他起名叫耶斯列;因为不久我就要惩罚耶户家在耶斯列流人血的罪,我要灭绝以色列家的国。
5அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
5“到那日,我要在耶斯列平原折断以色列的弓。”
6அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.
6后来,歌玛又怀孕,生了一个女儿。耶和华对何西阿说:“给她起名叫罗.路哈玛(“罗.路哈玛”意即”不蒙怜恤”);因为我必不再怜恤以色列家,我决不赦免他们。
7யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
7“但我要怜恤犹大家,使他们靠耶和华他们的 神得救。我要拯救他们,并不是靠弓、靠刀、靠兵器,也不是靠战马、靠骑兵。”
8அவள் லோருகாமாவை முலைமறக்கப்பண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.
8罗.路哈玛断奶之后,歌玛又怀孕生了一个儿子。
9அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
9耶和华说:“给他起名叫罗.阿米(“罗.阿米”意即“非我民”);因为你们不是我的子民,我也不是你们的 神。
10என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
10预言将来的复兴“然而,以色列人的数目,必多如海边的沙,量不尽,数不完。从前在什么地方对他们说:‘你们不是我的子民’,将来要在那里对他们说:‘你们是永活的 神的儿子。’
11அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
11犹大人和以色列人要聚集在一起,为自己立一位首领,并离开那地上去,因为耶斯列的日子必为大日。”(本章第10-11节在《马索拉抄本》为2:1-2)