Tamil

聖經新譯本 (Simplified)

Isaiah

13

1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்டபாரம்.
1预言巴比伦倾覆
2உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.
2你要在光秃的山上竖起旗帜,向众人扬声挥手,叫他们进入权贵的门。
3நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.
3我向我特选的军兵下了命令;我也呼召了我的勇士,就是那些骄傲自夸的人,去执行我在怒气中所要作的。
4திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் யுத்தராணுவத்தை இலக்கம்பார்க்கிறார்.
4听啊!山上有喧哗的声音,好像是众多的人民;听啊!有多国的人的嘈杂声,好像是列国聚集在一起。万军之耶和华正在数点军兵,预备打仗。
5கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
5他们从远地而来,从天边而来。就是耶和华和他恼怒的工具,要毁灭这全地。
6அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.
6哀号吧!因为耶和华的日子近了,这日子来到,好像毁灭从全能者那里来到一样。
7ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோகும்.
7因此,各人的手都必发软,各人也必心惊胆战。
8அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.
8他们都要惊惶失措,疼痛与痛苦必抓住他们;他们必绞痛,像生产中的妇人一样。他们在惊愕中彼此对望,面色像火焰一般。
9இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.
9看哪!耶和华的日子快来到,必有残忍、愤恨与烈怒,使这地荒凉,使其中的罪人灭绝。
10வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.
10天上的星星和众星座不再发光;太阳刚出来就变为黑暗,月亮也不再发光。
11பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.
11我必因世界的邪恶施行刑罚,也必因恶人的罪孽惩罚他们;我要使狂妄人的骄傲止息,使强暴人的狂傲降卑。
12புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.
12我必使人比精金还少,使人比俄斐的金更稀罕。
13இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.
13在万军之耶和华发怒的时候,就是我大发烈怒的日子,我要使天震动,大地必摇撼,离开本位。
14துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
14人必像被追猎的羚羊,又像无人招聚的羊群,各自归向本族,各自逃回本地。
15அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.
15凡被追上的,必被刺死;凡被捉住的,必倒在刀下。
16அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
16他们的婴孩必在他们眼前被摔死;他们的房屋必被抢掠,他们的妻子必被污辱。
17இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
17看哪!我要激动玛代人来攻击他们。玛代人不重视银子,也不喜爱金子。
18வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
18他们的弓箭必射倒年轻人,他们不怜悯妇人腹中的婴儿;他们的眼也不顾惜小孩。
19ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.
19巴比伦本是列国中的华美,是迦勒底人引以为傲的荣耀,必像 神倾覆的所多玛、蛾摩拉一样。
20இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
20那地必永远没有居民,世世代代无人居住;阿拉伯人不在那里搭帐幕;牧羊人也不领羊群躺卧在那里。
21காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
21躺卧在那里的,只有旷野的走兽;充满着他们房屋的,只有吼叫着的野兽;鸵鸟住在那里,野山羊在那里跳跃。
22அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார்.
22豺狼必在巴比伦的宫中呼号,野狗必在他们华美的殿里吠叫。巴比伦受罚的时候临近了,它的日子必不长久。