1இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
1以色列人将蒙赐福
2உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
2那创造你,从母胎里就塑造了你,又要帮助你的耶和华这样说:我的仆人雅各啊!我所拣选的耶书仑啊!你不要惧怕。
3தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
3因为我要把水浇灌干渴之处,把河水浇灌干旱之地;我必把我的灵浇灌你的后裔,把我的福降给你的子孙。
4அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்.
4他们要像从草中生长起来,又像溪水旁的柳树。
5ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.
5这个必说:‘我是属耶和华的’;那个也必以雅各的名称呼自己;另一个必亲手写上‘我是属耶和华的’,并且要以以色列的名字替自己命名。”
6நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
6 神是独一真神耶和华以色列的王、以色列的救赎主、万军之耶和华这样说:“我是首先的,我是末后的;除我以外,再没有真神。
7பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
7谁像我呢?让他宣告,让他述说,又在我面前陈明吧!自从我设立古时的子民,未来的事和将要发生的事,让他们把它们述说出来吧!
8நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.
8你们不要惊惶,也不要惧怕。我不是老早就说了给你们听,告诉了你们吗?你们就是我的见证人。除我以外,还有真神吗?没有别的磐石;我一个也不知道。”
9விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
9制造偶像者的愚昧制造偶像的人,尽都是虚空的,他们所喜爱的,都没有益处。他们的见证人,一无所见,一无所知,以致他们蒙羞。
10ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
10谁制造神像,或铸造偶像,不想得到益处呢?
11இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.
11看哪!所有与它同伙的都必蒙羞;工匠也不过是人罢了。让他们都集合起来,都站立起来;让他们都惧怕,都一同蒙羞。
12கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
12铁匠先用工具在铁上雕刻,然后在火炭中加工,再用锤子把铁锤成形状,用他有力的膀臂锤成。他若饥饿,就没有力量;他若不喝水,就疲乏。
13தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான்.
13木匠拉线,用笔画出轮廓,用刨子刨平,用圆规画出模样,做成人的形状,有人一般的美丽,好住在庙里。
14அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
14他为自己砍伐香柏树,或选取榆树和橡树,让它在树林中长起来;他栽种松树,让雨水使它长大。
15மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
15人可以用这树作燃料,可以拿来生火取暖,又可以烧着烤饼;人竟然用它做神像敬拜,他做了雕刻的偶像,又向它叩拜。
16அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
16他把木头的一半放在火里燃烧;在上面烤肉;吃了烤肉,并且吃饱了,就自己烤火取暖,说:“哈哈!我暖和了,我看见火了。”
17அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
17他用剩下来的一半做了一个神像,就是他雕刻的偶像,他向它俯伏,向它敬拜,又向它祷告,说:“求你救我,因为你是我的神。”
18அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
18他们并不知道,也不明白;因为耶和华闭住他们的眼睛,使他们不能看见,塞住他们的心,使他们不能明白。
19அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
19没有人细心思想,也没有人有知识有聪明说:“我把木头的一半放在火里燃烧,我也在炭火上烘过饼,烤过肉吃,剩下的,我却用来做了一个可憎之物,我要向木头叩拜吗?”
20அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்டமனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
20他所追求的只是灰尘,被迷惑了的心使他偏离正道了;他不能救自己,也不会说:“在我的右手中不是有个假神吗?”
21யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
21耶和华救赎之恩雅各和以色列啊!要记念这些话,因为你是我的仆人。我造了你,是要你作我的仆人;以色列啊!你必不会被我忘记。
22உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
22我涂抹了你的过犯,像密云消散;我涂抹了你的罪恶,如薄云灭没,你当归向我,因为我救赎了你。
23வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
23诸天啊!你们要欢呼,因为耶和华作成了这事。地的深处啊!你们要吶喊。群山啊!你们要发声欢呼。树林和其中所有的树啊!你们都当这样。因为耶和华救赎了雅各,他要借着以色列使自己得荣耀。
24உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
24你的救赎主,就是那在母胎中就造了你的耶和华这样说:“我耶和华是创造万物的,我是独自展开诸天,铺张大地的。
25நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப்பண்ணுகிறவர்.
25我使说假话者的兆头失效,使占卜者都变成愚昧人;我使有智慧的人后退,使他们的知识变为愚拙。
26நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
26我使我仆人的话实现,使我使者的谋算成就。我对耶路撒冷说:‘你必有人居住。’对犹大的城镇说:‘你们要再被建造起来,至于其中的废墟,我必重建它们。’
27நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.
27我对深渊说:‘你干了吧,我必使你的江河干涸!’
28கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
28我对古列说:‘我的牧人;他必成就我所喜悦的一切。’他要对耶路撒冷说:‘你必被重建起来!’他必对圣殿说:‘你的根基要奠定!’”