Tamil

聖經新譯本 (Simplified)

Job

8

1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
1比勒达首次发言
2நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
2“这些话你要说到几时,你口中的言语像狂风到几时呢?
3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
3 神怎会歪曲公平?全能者怎会屈枉公义?
4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
4你的儿女若得罪了他,他就因他们的过犯撇弃他们。
5நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
5你若殷勤寻求 神,向全能者恳求;
6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
6你若又洁净又正直,他就必为你奋起,复兴你公义的居所。
7உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
7你起初虽然微小,到后来必定非常兴旺。
8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
8离开 神毫无倚靠请你查问前几代,留意他们列祖所查究的。
9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
9我们只是昨天才有的,所以一无所知;我们在世的日子不过是影儿。
10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
10难道他们不指教你,从心里发出言语来吗?
11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
11蒲草没有泥,怎能生长?芦苇没有水,怎能长大呢?
12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
12尚青还没有割下来的时候,就比百草先枯槁。
13தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
13忘记 神的,他们的末路也是这样;不敬虔的人,他的指望必成泡影。
14அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
14他所自恃的,必被折断;他所靠赖的,不过是蜘蛛网。
15ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
15他倚靠自己的家,家却立不住,他抓紧自己的家,家却存不久。
16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
16他在阳光之下,枝润叶青,它的嫩枝长满园子,
17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
17它的根缠绕石堆,扎入石地之中。
18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.
18他若从本处被拔除,那处就否认他,说:‘我没有见过你。’
19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
19看哪,这就是他人生的乐趣,往后必有别的人从尘土中生出来。
20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
20 神不丢弃完全人看哪, 神必不离弃完全人,也不扶助行恶的人之手;
21இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
21他还要以欢笑充满你的口,以欢呼充满你的嘴。
22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
22恨你的都必以羞耻为衣,恶人的帐棚必归于无有。”