1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
1敬畏 神大有倚靠
2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
2行事正直的,敬畏耶和华;行为乖僻的,却藐视他。
3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
3愚妄人的口中长出骄傲的枝子;智慧人的嘴唇,能保障自己。
4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
4没有耕牛,槽头干净;出产丰盛,却是凭着牛的力量。
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
5诚实的证人不说谎话;虚伪的证人吐出谎言。
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்.
6好讥笑人的寻找智慧,却寻不着;聪明人寻找知识,却轻易得着。
7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.
7你当离开愚昧人,因为你不会从他的嘴里晓得知识。
8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
8精明人的智慧能分辨自己的道路;愚昧人的愚妄却欺骗自己。
9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
9愚妄人讥笑赎愆祭,正直人中间却有恩宠。
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
10人的苦楚,只有自己心里知道;心中的喜乐,外人也不能分享。
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
11恶人的家必毁坏,正直人的帐棚却必兴盛。
12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
12有一条路,人以为是正路,走到尽头却是死亡之路。
13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
13人在喜笑中,心里也会有痛苦;欢乐的结局,会是愁苦。
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
14心中背道的,必饱尝自己行为的恶果;善人也因自己所行的,得到善报。
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
15愚蒙人凡话都信;精明的人却步步谨慎。
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
16智慧人敬畏耶和华(“智慧人敬畏耶和华”或译:“智慧人恐惧战兢”),远离恶事;愚昧人却骄傲自恃。
17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
17轻易动怒的,行事愚妄;心怀诡计的人,被人恨恶。
18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
18愚蒙人得愚妄为产业;精明的人以知识为冠冕。
19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
19坏人必俯伏在好人面前,恶人必俯伏在义人门口。
20தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
20穷人连邻舍也厌恶他;财主却有很多人爱他。
21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
21藐视邻舍的,是为有罪;恩待贫穷人的,是为有福。
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
22图谋恶事的,不是走错了吗?谋求善事的,必得慈爱和诚实。
23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
23一切劳苦都有益处,嘴上空谈引致贫穷。
24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
24智慧人的冠冕是他们的财富;愚昧人的愚妄,始终是愚妄。
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
25作真见证的,救人性命;吐出谎言的,以诡诈害人。
26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
26敬畏耶和华的,大有倚靠;他的子孙也有避难所。
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
27敬畏耶和华是生命的泉源,能使人避开死亡的网罗。
28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
28君王的荣耀在于人民众多,帝王的没落由于国民寡少。
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
29不轻易动怒的,十分聪明;轻易动怒的,大显愚妄。
30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
30心里平静,可使身体健康;但嫉妒能使骨头朽烂。
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்;
31欺压贫寒的,就是辱骂造他的主;恩待穷苦人的,就是尊敬造他的主。
32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
32恶人必因自己所行的恶事被推倒,义人死的时候仍有所倚靠。
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
33智慧居于聪明人的心中;愚昧人心里所存的,人所周知(“愚昧人心里所存的,人所周知”有古?本作“愚昧人心中一无所知”)。
34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
34正义使国家兴盛,罪恶是人民的羞辱。
35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
35明慧的臣仆,为王喜悦;贻羞的仆人,遭王震怒。