Tamil

聖經新譯本 (Simplified)

Proverbs

24

1பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
1得智慧必得善报和盼望
2அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
2因为他们的心图谋强暴,他们的嘴唇讲论奸恶。
3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
3房屋的建造是凭着智慧,又借着聪明得到坚立;
4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
4并且借着知识,各房间充满各样宝贵和美好的财物。
5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
5智慧人大有能力,有知识的人力上加力。
6நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
6你要凭着智谋去作战;谋士众多,就可得胜。
7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
7智慧对愚妄人来说是太高超,因此他在城门口哑口无言。
8தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.
8计划作恶的,必称为阴谋家。
9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
9愚妄人的计谋,尽是罪恶;好讥笑人的是人所厌恶的。
10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
10你在患难的日子若是懈怠,你的力量就微小。
11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
11被拉到死地的人,你要拯救;将要被杀戮的人,你要挽救。
12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
12如果你说:“这事我不知道。”那衡量人心的不明白吗?那看顾你性命的不晓得吗?他不按照各人的行为报应各人吗?
13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
13我儿,你要吃蜜,因为这是好的;吃蜂房下滴的蜜,就觉甘甜。
14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
14要知道智慧对你的心也是这样,如果你得着智慧,就必有好结局,你的盼望也不会断绝。
15துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
15恶人哪!不要埋伏攻击义人的住处,不要毁坏他的居所。
16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
16因为义人虽然七次跌倒,仍能再起来;但恶人必在祸患中绊倒。
17உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
17你的仇敌跌倒的时候,你不要欢喜;他绊倒的时候,你心里不可欢乐。
18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
18恐怕耶和华看见了,就不喜悦,把他的怒气从仇敌的身上,转到你的身上。
19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
19不要因作恶的人心怀不平,也不要嫉妒恶人。
20துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும்.
20因为恶人必没有好结局,恶人的灯必要熄灭。
21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.
21我儿,你要敬畏耶和华,也要尊敬君王;不要与叛逆的人结交。
22சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
22因为他们的刑罚必忽然临到;耶和华与君王要施行的毁灭,谁能晓得呢?
23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
23当正直勤奋以下也是智慧人的话:审判的时候看人的情面是不对的。
24துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.
24对坏人说“你是好人”的,万民都要咒骂他,万族都必憎恶他。
25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
25指责坏人的,必得欢悦;美福必临到他们。
26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
26应对诚实的,如同亲吻别人。
27வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.
27你要在外面预备好你的工作,在田间为自己准备妥当,然后建造你的房屋。
28நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
28不可无故作证指控你的邻舍;不可诬告他人。
29அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
29你不可说:“人怎样待我,我也怎样待他;我要照他所行的报复他。”
30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
30我经过懒惰人的田地,无知人的葡萄园;
31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
31只见到处长满蒺藜,地面盖满刺草,石墙也倒塌了。
32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
32我看了,就用心思想;我见了,就领受了教训。
33இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
33再睡片时,打盹片时,抱着手躺卧片时,
34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
34你的贫穷就必像强盗来到,你的缺乏就必像拿兵器的人来到。