1கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
1祈求 神究治恶人耶和华啊!你为什么远远地站着?在患难的时候,你为什么隐藏起来呢?
2துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
2恶人骄横地追逼困苦人,愿恶人陷入自己所设的阴谋中。
3துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான்.
3恶人夸耀心中的欲望,他称赞贪财的人,却藐视耶和华(“他称赞贪财的人,却藐视耶和华”或译:“贪财的人谤渎耶和华,并藐视他”)。
4துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
4恶人面带骄傲,说:“耶和华必不追究!”在他的一切思想中,都没有 神。
5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான்.
5他的道路时常稳妥,你的判断高超,他却不放在眼内;他对所有的仇敌都嗤之以鼻。
6"நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
6他心里说:“我必永不摇动,我决不会遭遇灾难。”
7அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
7他口里充满咒诅、诡诈和欺压的话,舌头底下尽是毒害与奸恶。
8கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
8他在村庄里埋伏等候,在隐密处杀害无辜的人,他的眼睛暗地里窥探不幸的人。
9தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
9他在隐密处埋伏,像狮子埋伏在丛林中;他埋伏要掳走困苦人,他把困苦人拉入自己的网中,掳走了他们。
10திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
10他击打,他屈身蹲伏,不幸的人就倒在他的爪下。
11" தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்" என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
11他心里说:“ 神已经忘记了,他已经掩面,永远不看。”
12கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.
12耶和华啊!求你起来; 神啊!求你举起手来,不要忘记困苦的人。
13துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி, "நீர் கேட்டு விசாரிப்பதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?
13恶人为什么藐视 神,心里说:“你必不追究”呢?
14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
14其实你已经看见了,忧患与愁苦你都已经看到,并且放在自己的手中;不幸的人把自己交托你;你是帮助孤儿的。
15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்கம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
15愿你打断恶人和坏人的膀臂,愿你追究他们的恶行,直到清清楚楚。
16கர்த்தர் சதாகாலங்களுக்கும் இராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
16耶和华作王直到永永远远,列国都从他的地上灭亡。
17கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
17耶和华啊!困苦人的心愿你已经听见,你必坚固他们的心,也必留心听他们的呼求;
18மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
18好为孤儿和受欺压的人伸冤,使地上的人不再施行恐吓。