Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

33

1நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
1要歌颂和倚靠 神的权能义人哪!你们要靠着耶和华欢呼;正直人赞美主是合宜的。
2சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.
2你们要弹琴称谢耶和华,用十弦瑟歌颂他。
3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
3你们要向他唱新歌,在欢呼声中巧妙地弹奏。
4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
4因为耶和华的话是正直的,他的一切作为都是诚实的。
5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
5耶和华喜爱公义和公正,全地充满耶和华的慈爱。
6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
6诸天借着耶和华的话而造,天上的万象借着他口中的气而成。
7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
7他把海水聚集成垒(“成垒”或译:“在皮袋里”),把深海安放在库房中。
8பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
8愿全地都敬畏耶和华,愿世上的居民都惧怕他。
9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
9因为他说有,就有;命立,就立。
10கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
10耶和华破坏列国的谋略,使万民的计划挫败。
11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
11耶和华的谋略永远立定,他心中的计划万代长存。
12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
12以耶和华为 神的,那国是有福的;耶和华拣选作自己产业的,那民是有福的。
13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
13耶和华从天上观看,他看见全人类。
14தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
14从自己的住处,他察看地上所有的居民。
15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
15他是那创造众人的心,了解他们一切作为的。
16எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
16君王不是因兵多得胜,勇士不是因力大得救。
17இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
17想靠马得胜是枉然的;马虽然力大,也不能救人。
18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
18耶和华的眼睛看顾敬畏他的人,和那些仰望他慈爱的人;
19பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
19要搭救他们的性命脱离死亡,使他们在饥荒中可以存活。
20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
20我们的心等候耶和华,他是我们的帮助、我们的盾牌。
21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
21我们的心因他欢乐,因为我们倚靠他的圣名。
22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
22耶和华啊!求你照着我们所仰望你的,向我们施慈爱。