Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

55

1தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
1大卫的训诲诗,交给诗班长,用丝弦的乐器伴奏。 神啊!求你倾听我的祷告,不要隐藏起来不听我的恳求。
2எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
2求你留心听我,应允我;我在苦恼中必不安宁,唉哼难过;
3அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
3这都是由于仇敌的声音,和恶人的欺压;因为他们使祸患临到我的身上,怒气冲冲地迫害我。
4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
4我的心在我里面绞痛,死亡的恐怖落在我身上。
5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
5惧怕和战兢临到我,惊恐笼罩着我。
6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன்.
6我说:“但愿我有鸽子一般的翅膀,我就飞走,得以安居。
7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
7看哪!我必逃往远处,在旷野里住宿。(细拉)
8பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
8我要赶快到我避难的地方去,逃避狂风暴雨。”
9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
9主啊!扰乱恶人的计谋,使他们的意见(“意见”原文作“舌头”)分歧,因为我在城中看见了强暴和争竞的事。
10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
10恶人日夜在城墙上绕行,在城里尽是邪恶与祸害;
11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
11城中也有毁灭人的事,欺压和诡诈不离城里的街道。
12என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
12原来不是仇敌辱骂我,如果是仇敌,我还可以忍受;也不是恨我的人向我狂妄自大,如果是恨我的人,我还可以躲避他。
13எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
13但你是和我同等地位的人,是我的良友,我的知己。
14நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.
14我们常在一起密谈,我们在 神的殿中与群众同行。
15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.
15愿死亡忽然临到他们身上,愿他们活活下到阴间去,因为在他们中间,就是在他们的住所里,尽是邪恶。
16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
16至于我,我却要求告 神,耶和华就必拯救我。
17அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
17无论在晚上、早晨或中午,我都哀诉唉哼;他必听我的声音。
18திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
18他救赎我的性命脱离攻击我的人,使我得着平安,尽管攻击我的人的确很多。
19ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
19 神必听见,那从亘古坐着为王的必使他们受苦,(细拉)因他们不肯改变,也不敬畏 神。
20அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.
20他违背了自己的约,伸手攻击那些与他和好的人。
21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
21他的口比奶油光滑,他的心却怀着争战的意图;他的话比油还柔和,其实却是拔了出来的刀。
22கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
22你要把你的重担卸给耶和华,他必扶持你;他永远不会让义人动摇。
23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
23 神啊!你必使恶人堕入灭亡的深坑里;流人血和行诡诈的人必活不到半世;至于我,我必倚靠你。