1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
1大卫的金诗,交给诗班长,调用“休要毁坏”,是大卫躲在山洞里逃避扫罗时作的。 神啊,求你恩待我!求你恩待我!因为我投靠你;我要投靠在你翅膀的荫下,直到灾害过去。
2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
2我要向至高的 神呼求,就是向为我成就他旨意的 神呼求。
3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
3 神从天上施恩拯救我,斥责那践踏我的人;(细拉) 神必向我发出他的慈爱和信实。
4என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
4我躺卧在狮子中间,就是在那些想吞灭人的世人中间;他们的牙齿是枪和箭,他们的舌头是快刀。
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
5 神啊!愿你被尊崇,过于诸天;愿你的荣耀遍及全地。
6என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
6他们为我的脚设下了网罗,使我低头屈服;他们在我面前挖了坑,自己反掉进坑中。(细拉)
7என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
7 神啊!我的心坚定,我的心坚定;我要歌唱,我要颂赞。
8என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
8我的灵(“灵”或译:“荣耀”或“肝”;与16:9,30:12,108:1同)啊!你要醒过来。琴和瑟啊!你们都要醒过来。我也要唤醒黎明。
9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
9主啊!我要在万民中称谢你,在万族中歌颂你。
10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
10因为你的慈爱伟大,高及诸天,你的信实上达云霄。
11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
11 神啊!愿你被尊崇,过于诸天;愿你的荣耀遍及全地。