Tamil

World English Bible

Genesis

10

1நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
1Now this is the history of the generations of the sons of Noah and of Shem, Ham, and Japheth. Sons were born to them after the flood.
2யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
2The sons of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech, and Tiras.
3கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
3The sons of Gomer: Ashkenaz, Riphath, and Togarmah.
4யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
4The sons of Javan: Elishah, Tarshish, Kittim, and Dodanim.
5இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
5Of these were the islands of the nations divided in their lands, everyone after his language, after their families, in their nations.
6காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
6The sons of Ham: Cush, Mizraim, Put, and Canaan.
7கூஷூடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
7The sons of Cush: Seba, Havilah, Sabtah, Raamah, and Sabteca. The sons of Raamah: Sheba and Dedan.
8கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
8Cush became the father of Nimrod. He began to be a mighty one in the earth.
9இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
9He was a mighty hunter before Yahweh. Therefore it is said, “Like Nimrod, a mighty hunter before Yahweh.”
10சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
10The beginning of his kingdom was Babel, Erech, Accad, and Calneh, in the land of Shinar.
11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
11Out of that land he went into Assyria, and built Nineveh, Rehoboth Ir, Calah,
12நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
12and Resen between Nineveh and Calah (the same is the great city).
13மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
13Mizraim became the father of Ludim, Anamim, Lehabim, Naphtuhim,
14பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.
14Pathrusim, Casluhim (which the Philistines descended from), and Caphtorim.
15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
15Canaan became the father of Sidon (his firstborn), Heth,
16எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
16the Jebusite, the Amorite, the Girgashite,
17ஈவியரையும், அர்கீரியரையும், சீநியரையும்,
17the Hivite, the Arkite, the Sinite,
18அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
18the Arvadite, the Zemarite, and the Hamathite. Afterward the families of the Canaanites were spread abroad.
19கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
19The border of the Canaanites was from Sidon, as you go toward Gerar, to Gaza; as you go toward Sodom, Gomorrah, Admah, and Zeboiim, to Lasha.
20இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
20These are the sons of Ham, after their families, after their languages, in their lands, in their nations.
21சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
21To Shem, the father of all the children of Eber, the elder brother of Japheth, to him also were children born.
22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
22The sons of Shem: Elam, Asshur, Arpachshad, Lud, and Aram.
23ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
23The sons of Aram: Uz, Hul, Gether, and Mash.
24அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
24Arpachshad became the father of Shelah. Shelah became the father of Eber.
25ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
25To Eber were born two sons. The name of the one was Peleg, for in his days the earth was divided. His brother’s name was Joktan.
26யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
26Joktan became the father of Almodad, Sheleph, Hazarmaveth, Jerah,
27அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
27Hadoram, Uzal, Diklah,
28ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
28Obal, Abimael, Sheba,
29ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
29Ophir, Havilah, and Jobab. All these were the sons of Joktan.
30இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
30Their dwelling was from Mesha, as you go toward Sephar, the mountain of the east.
31இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
31These are the sons of Shem, after their families, after their languages, in their lands, after their nations.
32தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
32These are the families of the sons of Noah, after their generations, in their nations. Of these were the nations divided in the earth after the flood.