1فاجاب الرب ايوب فقال
1பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:
2هل يخاصم القدير موبّخه ام المحاجّ الله يجاوبه
2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.
3فاجاب ايوب الرب وقال
3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
4ها انا حقير فماذا اجاوبك. وضعت يدي على فمي.
4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
5مرة تكلمت فلا اجيب ومرتين فلا ازيد
5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6فاجاب الرب ايوب من العاصفة فقال
6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
7الآن شدّ حقويك كرجل. اسألك فتعلمني.
7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
8لعلك تناقض حكمي. تستذنبني لكي تتبرر انت.
8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
9هل لك ذراع كما لله وبصوت مثل صوته ترعد.
9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
10تزيّن الآن بالجلال والعزّ والبس المجد والبهاء.
10இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
11فرّق فيض غضبك وانظر كل متعظم واخفضه.
11நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
12انظر الى كل متعظم وذلّله ودس الاشرار في مكانهم.
12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
13اطمرهم في التراب معا واحبس وجوههم في الظلام.
13நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
14فانا ايضا احمدك لان يمينك تخلصك
14அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
15هوذا بهيموث الذي صنعته معك. ياكل العشب مثل البقر.
15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.
16ها هي قوته في متنيه وشدته في عضل بطنه.
16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
17يخفض ذنبه كارزة. عروق فخذيه مضفورة.
17அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
18عظامه انابيب نحاس. جرمها حديد ممطول.
18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
19هو اول اعمال الله. الذي صنعه اعطاه سيفه.
19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
20لان الجبال تخرج له مرعى وجميع وحوش البر تلعب هناك.
20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
21تحت السدرات يضطجع في ستر القصب والغمقة.
21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
22تظلله السدرات بظلها. يحيط به صفصاف السواقي.
22தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
23هوذا النهر يفيض فلا يفر هو. يطمئن ولو اندفق الاردن في فمه.
23இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
24هل يؤخذ من امامه. هل يثقب انفه بخزامة
24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?