الكتاب المقدس (Van Dyke)

Tamil

Job

8

1فاجاب بلدد الشوحي وقال
1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2الى متى تقول هذا وتكون اقوال فيك ريحا شديدة.
2நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
3هل الله يعوّج القضاء او القدير يعكس الحق.
3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
4اذ اخطأ اليه بنوك دفعهم الى يد معصيتهم.
4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
5فان بكرت انت الى الله وتضرعت الى القدير.
5நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
6ان كنت انت زكيا مستقيما فانه الآن يتنبه لك ويسلم مسكن برك.
6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
7وان تكن اولاك صغيرة فآخرتك تكثر جدا
7உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
8اسأل القرون الاولى وتأكد مباحث آبائهم.
8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
9لاننا نحن من امس ولا نعلم لان ايامنا على الارض ظل.
9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
10فهلا يعلمونك. يقولون لك ومن قلوبهم يخرجون اقوالا قائلين
10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
11هل ينمي البردي في غير الغمقة او تنبت الحلفاء بلا ماء.
11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
12وهو بعد في نضارته لم يقطع ييبس قبل كل العشب.
12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
13هكذا سبل كل الناسين الله ورجاء الفاجر يخيب
13தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
14فينقطع اعتماده ومتكله بيت العنكبوت.
14அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
15يستند الى بيته فلا يثبت. يتمسك به فلا يقوم.
15ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
16هو رطب تجاه الشمس وعلى جنته تنبت خراعيبه.
16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
17واصوله مشتبكة في الرجمة فترى محل الحجارة.
17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
18ان اقتلعه من مكانه يجحده قائلا ما رايتك.
18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.
19هذا هو فرح طريقه ومن التراب ينبت آخر
19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
20هوذا الله لا يرفض الكامل ولا يأخذ بيد فاعلي الشر.
20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
21عندما يملأ فاك ضحكا وشفتيك هتافا.
21இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
22يلبس مبغضوك خزيا. اما خيمة الاشرار فلا تكون
22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.