1من يحب التأديب يحب المعرفة ومن يبغض التوبيخ فهو بليد.
1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
2الصالح ينال رضى من قبل الرب اما رجل المكايد فيحكم عليه.
2நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
3لا يثبت الانسان بالشر. اما اصل الصدّيقين فلا يتقلقل.
3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
4المرأة الفاضلة تاج لبعلها. اما المخزية فكنخر في عظامه.
4குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
5افكار الصدّيقين عدل. تدابير الاشرار غش.
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.
6كلام الاشرار كمون للدم اما فم المستقيمين فينجيهم.
6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
7تنقلب الاشرار ولا يكونون. اما بيت الصدّيقين فيثبت.
7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
8بحسب فطنته يحمد الانسان. اما الملتوي القلب فيكون للهوان.
8தன் புத்திக்குத்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
9الحقير وله عبد خير من المتمجد ويعوزه الخبز.
9ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10الصدّيق يراعي نفس بهيمته. اما مراحم الاشرار فقاسية.
10நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
11من يشتغل بحقله يشبع خبزا. اما تابع البطّالين فهو عديم الفهم.
11தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12اشتهى الشرير صيد الاشرار واصل الصدّيقين يجدي.
12துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13في معصية الشفتين شرك الشرير. اما الصدّيق فيخرج من الضيق.
13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
14الانسان يشبع خيرا من ثمر فمه ومكافأة يدي الانسان ترد له.
14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
15طريق الجاهل مستقيم في عينيه. اما سامع المشورة فهو حكيم.
15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
16غضب الجاهل يعرف في يومه. اما ساتر الهوان فهو ذكي.
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
17من يتفوه بالحق يظهر العدل والشاهد الكاذب يظهر غشا.
17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
18يوجد من يهذر مثل طعن السيف. اما لسان الحكماء فشفاء.
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
19شفة الصدّيق تثبت الى الابد ولسان الكذب انما هو الى طرفة العين.
19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்;
20الغش في قلب الذين يفكرون في الشر اما المشيرون بالسلام فلهم فرح
20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
21لا يصيب الصدّيق شر. اما الاشرار فيمتلئون سوءا.
21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
22كراهة الرب شفتا كذب. اما العاملون بالصدق فرضاه
22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
23الرجل الذكي يستر المعرفة. وقلب الجاهل ينادي بالحمق.
23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
24يد المجتهدين تسود. اما الرخوة فتكون تحت الجزية.
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
25الغم في قلب الرجل يحنيه والكلمة الطيبة تفرّحه.
25மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26الصدّيق يهدي صاحبه. اما طريق الاشرار فتضلهم.
26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27الرخاوة لا تمسك صيدا. اما ثروة الانسان الكريمة فهي الاجتهاد.
27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
28في سبيل البر حياة وفي طريق مسلكه لا موت.
28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.