1موازين غش مكرهة الرب والوزن الصحيح رضاه.
1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
2تأتي الكبرياء فيأتي الهوان. ومع المتواضعين حكمة.
2அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
3استقامة المستقيمين تهديهم واعوجاج الغادرين يخربهم.
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
4لا ينفع الغنى في يوم السخط. اما البر فينجي من الموت.
4கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
5بر الكامل يقوّم طريقه. اما الشرير فيسقط بشرّه.
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
6بر المستقيمين ينجيهم اما الغادرون فيؤخذون بفسادهم.
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
7عند موت انسان شرير يهلك رجاؤه ومنتظر الاثمة يبيد.
7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும்.
8الصدّيق ينجو من الضيق ويأتي الشرير مكانه.
8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
9بالفم يخرب المنافق صاحبه وبالمعرفة ينجو الصدّيقون.
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
10بخير الصدّيقين تفرح المدينة وعند هلاك الاشرار هتاف.
10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
11ببركة المستقيمين تعلو المدينة وبفم الاشرار تهدم
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.
12المحتقر صاحبه هو ناقص الفهم. اما ذو الفهم فيسكت.
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
13الساعي بالوشاية يفشي السر والامين الروح يكتم الامر.
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
14حيث لا تدبير يسقط الشعب. اما الخلاص فبكثرة المشيرين.
14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
15ضررا يضر من يضمن غريبا. ومن يبغض صفق الايدي مطمئن.
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
16المرأة ذات النعمة تحصّل كرامة والاشدّاء يحصّلون غنى.
16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
17الرجل الرحيم يحسن الى نفسه والقاسي يكدر لحمه.
17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
18الشرير يكسب اجرة غش والزارع البر اجرة امانة.
18துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
19كما ان البر يؤول الى الحياة كذلك من يتبع الشر فالى موته.
19நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
20كراهة الرب ملتوو القلب ورضاه مستقيمو الطريق.
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.
21يد ليد لا يتبرر الشرير. اما نسل الصدّيقين فينجو.
21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
22خزامة ذهب في فنطيسة خنزيرة المرأة الجميلة العديمة العقل.
22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
23شهوة الابرار خير فقط. رجاء الاشرار سخط.
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
24يوجد من يفرق فيزداد ايضا ومن يمسك اكثر من اللائق وانما الى الفقر.
24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
25النفس السخية تسمّن والمروي هو ايضا يروى.
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
26محتكر الحنطة يلعنه الشعب والبركة على راس البائع.
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
27من يطلب الخير يلتمس الرضا ومن يطلب الشر فالشر ياتيه.
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
28من يتكل على غناه يسقط. اما الصديقون فيزهون كالورق.
28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.
29من يكدر بيته يرث الريح والغبي خادم لحكيم القلب.
29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
30ثمر الصدّيق شجرة حياة ورابح النفوس حكيم.
30நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
31هوذا الصدّيق يجازى في الارض فكم بالحري الشرير والخاطئ
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.