الكتاب المقدس (Van Dyke)

Tamil

Proverbs

10

1امثال سليمان-الابن الحكيم يسرّ اباه والابن الجاهل حزن امه.
1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
2كنوز الشر لا تنفع. اما البر فينجي من الموت.
2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
3الرب لا يجيع نفس الصدّيق ولكنه يدفع هوى الاشرار.
3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
4العامل بيد رخوة يفتقر. اما يد المجتهدين فتغني.
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5من يجمع في الصيف فهو ابن عاقل ومن ينام في الحصاد فهو ابن مخز
5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புகாலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
6بركات على راس الصدّيق. اما فم الاشرار فيغشاه ظلم.
6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
7ذكر الصدّيق للبركة واسم الاشرار ينخر.
7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
8حكيم القلب يقبل الوصايا وغبي الشفتين يصرع.
8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
9من يسلك بالاستقامة يسلك بالامان ومن يعوج طرقه يعرّف.
9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
10من يغمز بالعين يسبب حزنا والغبي الشفتين يصرع
10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
11فم الصدّيق ينبوع حياة وفم الاشرار يغشاه ظلم.
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
12البغضة تهيج خصومات والمحبة تستر كل الذنوب.
12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
13في شفتي العاقل توجد حكمة. والعصا لظهر الناقص الفهم.
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14الحكماء يذخرون معرفة. اما فم الغبي فهلاك قريب.
14ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
15ثروة الغني مدينته الحصينة هلاك المساكين فقرهم.
15ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.
16عمل الصديق للحياة. ربح الشرير للخطية.
16நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
17حافظ التعليم هو في طريق الحياة ورافض التأديب ضال.
17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
18من يخفي البغضة فشفتاه كاذبتان ومشيع المذمة هو جاهل.
18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
19كثرة الكلام لا تخلو من معصية. اما الضابط شفتيه فعاقل.
19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
20لسان الصدّيق فضة مختارة. قلب الاشرار كشيء زهيد.
20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
21شفتا الصدّيق تهديان كثيرين. اما الاغبياء فيموتون من نقص الفهم.
21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
22بركة الرب هي تغني ولا يزيد معها تعبا.
22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
23فعل الرذيلة عند الجاهل كالضحك. اما الحكمة فلذي فهم.
23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
24خوف الشرير هو يأتيه وشهوة الصدّيقين تمنح.
24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25كعبور الزوبعة فلا يكون الشرير. اما الصدّيق فاساس مؤبّد.
25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்;
26كالخل للاسنان وكالدخان للعينين كذلك الكسلان للذين ارسلوه.
26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
27مخافة الرب تزيد الايام. اما سنو الاشرار فتقصر.
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போகும்.
28منتظر الصدّيقين مفرح. اما رجاء الاشرار فيبيد.
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
29حصن للاستقامة طريق الرب. والهلاك لفاعلي الاثم.
29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
30الصدّيق لن يزحزح ابدا والاشرار لن يسكنوا الارض.
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
31فم الصدّيق ينبت الحكمة. اما لسان الاكاذيب فيقطع.
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
32شفتا الصدّيق تعرفان المرضي وفم الاشرار اكاذيب
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.