1الحكمة بنت بيتها. نحتت اعمدتها السبعة.
1ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,
2ذبحت ذبحها مزجت خمرها. ايضا رتبت مائدتها.
2தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,
3ارسلت جواريها تنادي على ظهور اعالي المدينة.
3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
4من هو جاهل فليمل الى هنا. والناقص الفهم قالت له
4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
5هلموا كلوا من طعامي واشربوا من الخمر التي مزجتها.
5நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
6اتركوا الجهالات فتحيوا وسيروا في طريق الفهم
6பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
7من يوبخ مستهزئا يكسب لنفسه هوانا ومن ينذر شريرا يكسب عيبا.
7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
8لا توبخ مستهزئا لئلا يبغضك. وبخ حكيما فيحبك.
8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
9اعط حكيما فيكون اوفر حكمة. علّم صدّيقا فيزداد علما.
9ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
10بدء الحكمة مخافة الرب ومعرفة القدوس فهم.
10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
11لانه بي تكثر ايامك وتزداد لك سنو حياة.
11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
12ان كنت حكيما فانت حكيم لنفسك وان استهزأت فانت وحدك تتحمل
12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
13المرأة الجاهلة صخّابة حمقاء ولا تدري شيئا.
13மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
14فتقعد عند باب بيتها على كرسي في اعالي المدينة
14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
15لتنادي عابري السبيل المقوّمين طرقهم.
15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
16من هو جاهل فليمل الى هنا. والناقص الفهم تقول له
16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
17المياه المسروقة حلوة وخبز الخفية لذيذ.
17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
18ولا يعلم ان الاخيلة هناك وان في اعماق الهاوية ضيوفها
18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.