1للانسان تدابير القلب ومن الرب جواب اللسان.
1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
2كل طرق الانسان نقية في عيني نفسه. والرب وازن الارواح.
2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3الق على الرب اعمالك فتثبت افكارك.
3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
4الرب صنع الكل لغرضه والشرير ايضا ليوم الشر.
4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5مكرهة الرب كل متشامخ القلب. يدا ليد لا يتبرأ.
5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
6بالرحمة والحق يستر الاثم وفي مخافة الرب الحيدان عن الشر.
6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
7اذا ارضت الرب طرق انسان جعل اعداءه ايضا يسالمونه.
7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
8القليل مع العدل خير من دخل جزيل بغير حق.
8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
9قلب الانسان يفكر في طريقه والرب يهدي خطوته.
9மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
10في شفتي الملك وحي. في القضاء فمه لا يخون
10ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
11قبّان الحق وموازينه للرب. كل معايير الكيس عمله.
11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12مكرهة الملوك فعل الشر لان الكرسي يثبت بالبر.
12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13مرضاة الملوك شفتا حق والمتكلم بالمستقيمات يحب.
13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14غضب الملك رسل الموت والانسان الحكيم يستعطفه.
14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15في نور وجه الملك حياة ورضاه كسحاب المطر المتأخر.
15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16قنية الحكمة كم هي خير من الذهب وقنية الفهم تختار على الفضة.
16பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியை சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
17منهج المستقيمين الحيدان عن الشر. حافظ نفسه حافظ طريقه
17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
18قبل الكسر الكبرياء وقبل السقوط تشامخ الروح.
18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19تواضع الروح مع الودعاء خير من قسم الغنيمة مع المتكبرين.
19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
20الفطن من جهة امر يجد خيرا. ومن يتكل على الرب فطوبى له.
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
21حكيم القلب يدعى فهيما وحلاوة الشفتين تزيد علما.
21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
22الفطنة ينبوع حياة لصاحبها وتأديب الحمقى حماقة.
22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
23قلب الحكيم يرشد فمه ويزيد شفتيه علما.
23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24الكلام الحسن شهد عسل حلو للنفس وشفاء للعظام.
24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
25توجد طريق تظهر للانسان مستقيمة وعاقبتها طرق الموت.
25மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
26نفس التعب تتعب له لان فمه يحثّه.
26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27الرجل اللئيم ينبش الشر وعلى شفتيه كالنار المتقدة.
27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
28رجل الاكاذيب يطلق الخصومة والنمّام يفرّق الاصدقاء.
28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
29الرجل الظالم يغوي صاحبه ويسوقه الى طريق غير صالحة.
29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
30من يغمض عينيه ليفكر في الاكاذيب ومن يعض شفتيه فقد اكمل شرا.
30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
31تاج جمال شيبة توجد في طريق البر.
31நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
32البطيء الغضب خير من الجبار ومالك روحه خير ممن يأخذ مدينة.
32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33القرعة تلقى في الحضن ومن الرب كل حكمها
33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.