1لقمة يابسة ومعها سلامة خير من بيت ملآن ذبائح مع خصام.
1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
2العبد الفطن يتسلط على الابن المخزي ويقاسم الاخوة الميراث.
2புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
3البوطة للفضة والكور للذهب وممتحن القلوب الرب.
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
4الفاعل الشر يصغى الى شفة الاثم والكاذب يأذن للسان فساد.
4துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5المستهزئ بالفقير يعيّر خالقه. الفرحان ببلية لا يتبرأ.
5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
6تاج الشيوخ بنو البنين وفخر البنين آباؤهم.
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
7لا تليق بالاحمق شفة السودد. كم بالاحرى شفة الكذب بالشريف.
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
8الهدية حجر كريم في عيني قابلها. حيثما تتوجه تفلح.
8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9من يستر معصية يطلب المحبة ومن يكرر أمرا يفرق بين الاصدقاء
9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
10الانتهار يؤثر في الحكيم اكثر من مئة جلدة في الجاهل.
10மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
11الشرير انما يطلب التمرد فيطلق عليه رسول قاس.
11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12ليصادف الانسان دبة ثكول ولا جاهل في حماقته.
12தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
13من يجازي عن خير بشر لن يبرح الشر من بيته.
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14ابتداء الخصام اطلاق الماء. فقبل ان تدفق المخاصمة اتركها.
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
15مبرّئ المذنب ومذنّب البريء كلاهما مكرهة الرب.
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
16لماذا في يد الجاهل ثمن. ألاقتناء الحكمة وليس له فهم.
16ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17الصدّيق يحب في كل وقت. اما الاخ فللشدة يولد.
17சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18الانسان الناقص الفهم يصفق كفا ويضمن صاحبه ضمانا.
18புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
19محب المعصية محب الخصام. المعلي بابه يطلب الكسر.
19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20الملتوي القلب لا يجد خيرا والمتقلب اللسان يقع في السوء.
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21من يلد جاهلا فلحزنه. ولا يفرح ابو الاحمق.
21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22القلب الفرحان يطيّب الجسم والروح المنسحقة تجفف العظم.
22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
23الشرير يأخذ الرشوة من الحضن ليعوّج طرق القضاء.
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட. மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.
24الحكمة عند الفهيم وعينا الجاهل في اقصى الارض.
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
25الابن الجاهل غم لابيه ومرارة للتي ولدته.
25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26ايضا تغريم البريء ليس بحسن وكذلك ضرب الشرفاء لاجل الاستقامة.
26நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27ذو المعرفة يبقي كلامه وذو الفهم وقور الروح.
27அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28بل الاحمق اذا سكت يحسب حكيما ومن ضم شفتيه فهيما
28பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.