الكتاب المقدس (Van Dyke)

Tamil

Proverbs

18

1المعتزل يطلب شهوته. بكل مشورة يغتاظ.
1பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
2الجاهل لا يسرّ بالفهم بل بكشف قلبه.
2மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3اذا جاء الشرير جاء الاحتقار ايضا ومع الهوان عار.
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
4كلمات فم الانسان مياه عميقة. نبع الحكمة نهر مندفق.
4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
5رفع وجه الشرير ليس حسنا لاخطاء الصدّيق في القضاء.
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.
6شفتا الجاهل تداخلان في الخصومة وفمه يدعو بضربات.
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
7فم الجاهل مهلكة له وشفتاه شرك لنفسه.
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
8كلام النمّام مثل لقم حلوة وهو ينزل الى مخادع البطن.
8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
9ايضا المتراخي في عمله هو اخو المسرف
9தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
10اسم الرب برج حصين. يركض اليه الصدّيق ويتمنّع.
10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
11ثروة الغني مدينته الحصينة ومثل سور عال في تصوره.
11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.
12قبل الكسر يتكبر قلب الانسان وقبل الكرامة التواضع.
12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13من يجيب عن امر قبل ان يسمعه فله حماقة وعار.
13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
14روح الانسان تحتمل مرضه. اما الروح المكسورة فمن يحملها.
14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15قلب الفهيم يقتني معرفة واذن الحكماء تطلب علما.
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
16هدية الانسان ترحب له وتهديه الى امام العظماء.
16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17الاول في دعواه محق. فياتي رفيقه ويفحصه.
17தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
18القرعة تبطل الخصومات وتفصل بين الاقوياء.
18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
19الاخ امنع من مدينة حصينة والمخاصمات كعارضة قلعة
19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.
20من ثمر فم الانسان يشبع بطنه. من غلة شفتيه يشبع.
20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21الموت والحياة في يد اللسان واحباؤه ياكلون ثمره.
21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
22من يجد زوجة يجد خيرا وينال رضى من الرب.
22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23بتضرعات يتكلم الفقير. والغني يجاوب بخشونة.
23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.
24المكثر الاصحاب يخرب نفسه. ولكن يوجد محب ألزق من الاخ
24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.