1يا ابني ان قبلت كلامي وخبأت وصاياي عندك
1என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
2حتى تميل اذنك الى الحكمة وتعطّف قلبك على الفهم
2நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3ان دعوت المعرفة ورفعت صوتك الى الفهم
3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4ان طلبتها كالفضة وبحثت عنها كالكنوز
4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
5فحينئذ تفهم مخافة الرب وتجد معرفة الله.
5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
6لان الرب يعطي حكمة. من فمه المعرفة والفهم.
6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
7يذخر معونة للمستقيمين. هو مجنّ للسالكين بالكمال.
7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
8لنصر مسالك الحق وحفظ طريق اتقيائه.
8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
9حينئذ تفهم العدل والحق والاستقامة. كل سبيل صالح
9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
10اذا دخلت الحكمة قلبك ولذّت المعرفة لنفسك
10ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
11فالعقل يحفظك والفهم ينصرك
11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
12لانقاذك من طريق الشرير ومن الانسان المتكلم بالاكاذيب
12அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
13التاركين سبل الاستقامة للسلوك في مسالك الظلمة
13அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
14الفرحين بفعل السوء المبتهجين باكاذيب الشر
14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
15الذين طرقهم معوجة وهم ملتوون في سبلهم.
15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
16لانقاذك من المرأة الاجنبية من الغريبة المتملقة بكلامها
16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
17التاركة اليف صباها والناسية عهد الهها.
17இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
18لان بيتها يسوخ الى الموت وسبلها الى الأخيلة.
18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
19كل من دخل اليها لا يؤوب ولا يبلغون سبل الحياة.
19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20حتى تسلك في طريق الصالحين وتحفظ سبل الصديقين.
20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
21لان المستقيمين يسكنون الارض والكاملين يبقون فيها.
21செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
22اما الاشرار فينقرضون من الارض والغادرون يستأصلون منها
22துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.