1الخمر مستهزئة. المسكر عجاج ومن يترنح بهما فليس بحكيم.
1திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
2رعب الملك كزمجرة الاسد. الذي يغيظه يخطئ الى نفسه.
2ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
3مجد الرجل ان يبتعد عن الخصام وكل احمق ينازع.
3வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
4الكسلان لا يحرث بسبب الشتاء فيستعطي في الحصاد ولا يعطى.
4சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
5المشورة في قلب الرجل مياه عميقة وذو الفطنة يستقيها.
5மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
6اكثر الناس ينادون كل واحد بصلاحه اما الرجل الامين فمن يجده.
6மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
7الصدّيق يسلك بكماله. طوبى لبنيه بعده.
7நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
8الملك الجالس على كرسي القضاء يذري بعينه كل شر.
8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
9من يقول اني زكيت قلبي تطهرت من خطيتي
9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
10معيار فمعيار مكيال فمكيال كلاهما مكرهة عند الرب.
10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
11الولد ايضا يعرف بافعاله هل عمله نقي ومستقيم.
11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
12الاذن السامعة والعين الباصرة الرب صنعهما كلتيهما.
12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
13لا تحب النوم لئلا تفتقر. افتح عينيك تشبع خبزا.
13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
14رديء رديء يقول المشتري واذا ذهب فحينئذ يفتخر.
14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
15يوجد ذهب وكثرة لآلئ. اما شفاه المعرفة فمتاع ثمين.
15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
16خذ ثوبه لانه ضمن غريبا ولاجل الاجانب ارتهن منه.
16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.
17خبز الكذب لذيذ للانسان ومن بعد يمتلئ فمه حصى.
17வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
18المقاصد تثبت بالمشورة وبالتدابير اعمل حربا.
18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
19الساعي بالوشاية يفشي السر. فلا تخالط المفتّح شفتيه.
19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
20من سبّ اباه او امه ينطفئ سراجه في حدقة الظلام
20தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
21ربّ ملك معجل في اوله. اما آخرته فلا تبارك.
21ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
22لا تقل اني اجازي شرا. انتظر الرب فيخلّصك.
22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
23معيار فمعيار مكرهة الرب. وموازين الغش غير صالحة.
23வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
24من الرب خطوات الرجل. اما الانسان فكيف يفهم طريقه.
24கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
25هو شرك للانسان ان يلغو قائلا مقدس وبعد النذر ان يسأل.
25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
26الملك الحكيم يشتت الاشرار ويرد عليهم النورج.
26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
27نفس الانسان سراج الرب. يفتش كل مخادع البطن.
27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
28الرحمة والحق يحفظان الملك وكرسيه يسند بالرحمة.
28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
29فخر الشبان قوتهم وبهاء الشيوخ الشيب.
29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
30حبر جرح منقية للشرير وضربات بالغة مخادع البطن
30காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.