1قلب الملك في يد الرب كجداول مياه حيثما شاء يميله.
1ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
2كل طرق الانسان مستقيمة في عينيه والرب وازن القلوب.
2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
3فعل العدل والحق افضل عند الرب من الذبيحة.
3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
4طموح العينين وانتفاخ القلب نور الاشرار خطية.
4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
5افكار المجتهد انما هي للخصب وكل عجول انما هو للعوز.
5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
6جمع الكنوز بلسان كاذب هو بخار مطرود لطالبي الموت.
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.
7اغتصاب الاشرار يجرفهم لانهم ابوا اجراء العدل.
7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
8طريق رجل موزور هي ملتوية. اما الزكي فعمله مستقيم.
8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
9السكنى في زاوية السطح خير من امرأة مخاصمة وبيت مشترك.
9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
10نفس الشرير تشتهي الشر. قريبه لا يجد نعمة في عينيه.
10துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.
11بمعاقبة المستهزئ يصير الاحمق حكيما والحكيم بالارشاد يقبل معرفة
11பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
12البار يتأمل بيت الشرير ويقلب الاشرار في الشر.
12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
13من يسد اذنيه عن صراخ المسكين فهو ايضا يصرخ ولا يستجاب.
13ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
14الهدية في الخفاء تفثأ الغضب والرشوة في الحضن تفثأ السخط الشديد.
14அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.
15اجراء الحق فرح للصدّيق والهلاك لفاعلي الاثم.
15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
16الرجل الضال عن طريق المعرفة يسكن بين جماعة الأخيلة.
16விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.
17محب الفرح انسان معوز. محب الخمر والدهن لا يستغني.
17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
18الشرير فدية الصدّيق ومكان المستقيمين الغادر
18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
19السكنى في ارض برية خير من امرأة مخاصمة حردة.
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
20كنز مشتهى وزيت في بيت الحكيم اما الرجل الجاهل فيتلفه.
20வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
21التابع العدل والرحمة يجد حياة حظا وكرامة.
21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
22الحكيم يتسور مدينة الجبابرة ويسقط قوة معتمدها.
22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
23من يحفظ فمه ولسانه يحفظ من الضيقات نفسه.
23தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
24المنتفخ المتكبر اسمه مستهزئ عامل بفيضان الكبرياء.
24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
25شهوة الكسلان تقتله لان يديه تأبيان الشغل.
25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
26اليوم كله يشتهي شهوة. اما الصدّيق فيعطي ولا يمسك.
26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
27ذبيحة الشرير مكرهة فكم بالحري حين يقدمها بغش.
27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
28شاهد الزور يهلك والرجل السامع للحق يتكلم.
28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
29الشرير يوقح وجهه. اما المستقيم فيثبّت طرقه.
29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
30ليس حكمة ولا فطنة ولا مشورة تجاه الرب.
30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
31الفرس معد ليوم الحرب. اما النصرة فمن الرب
31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.