1يا ابني ان ضمنت صاحبك ان صفقت كفك لغريب
1என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
2ان علقت في كلام فمك ان اخذت في كلام فيك
2நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
3اذا فافعل هذا يا ابني ونج نفسك اذا صرت في يد صاحبك. اذهب ترام والحّ على صاحبك.
3இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
4لا تعط عينيك نوما ولا اجفانك نعاسا.
4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
5نج نفسك كالضبي من اليد كالعصفور من يد الصياد
5வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
6اذهب الى النملة ايها الكسلان. تأمل طرقها وكن حكيما.
6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
7التي ليس لها قائد او عريف او متسلط
7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
8وتعد في الصيف طعامها وتجمع في الحصاد اكلها.
8கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
9الى متى تنام ايها الكسلان. متى تنهض من نومك.
9சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
10قليل نوم بعد قليل نعاس وطي اليدين قليلا للرقود.
10இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
11فياتي فقرك كساع وعوزك كغاز
11உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.
12الرجل اللئيم الرجل الاثيم يسعى باعوجاج الفم.
12பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
13يغمز بعينيه يقول برجله يشير باصابعه.
13அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான்.
14في قلبه اكاذيب. يخترع الشر في كل حين. يزرع خصومات.
14அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
15لاجل ذلك بغتة تفاجئه بليته. في لحظة ينكسر ولا شفاء
15ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
16هذه الستة يبغضها الرب وسبعة هي مكرهة نفسه.
16ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17عيون متعالية لسان كاذب ايد سافكة دما بريئا
17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை,
18قلب ينشئ افكارا رديئة ارجل سريعة الجريان الى السوء
18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
19شاهد زور يفوه بالاكاذيب وزارع خصومات بين اخوة
19அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
20يا ابني احفظ وصايا ابيك ولا تترك شريعة امك.
20என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
21اربطها على قلبك دائما. قلّد بها عنقك.
21அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
22اذا ذهبت تهديك. اذا نمت تحرسك واذا استيقظت فهي تحدّثك.
22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
23لان الوصية مصباح والشريعة نور وتوبيخات الادب طريق الحياة.
23கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
24لحفظك من المرأة الشريرة من ملق لسان الاجنبية.
24அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.
25لا تشتهين جمالها بقلبك ولا تأخذك بهدبها.
25உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
26لانه بسبب امرأة زانية يفتقر المرء الى رغيف خبز وامرأة رجل آخر تقتنص النفس الكريمة.
26வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
27أيأخذ انسان نارا في حضنه ولا تحترق ثيابه.
27தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
28او يمشي انسان على الجمر ولا تكتوي رجلاه.
28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
29هكذا من يدخل على امرأة صاحبه. كل من يمسّها لا يكون بريئا.
29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
30لا يستخفون بالسارق ولو سرق ليشبع نفسه وهو جوعان.
30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
31ان وجد يرد سبعة اضعاف ويعطي كل قنية بيته.
31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
32اما الزاني بامرأة فعديم العقل. المهلك نفسه هو يفعله.
32ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
33ضربا وخزيا يجد وعاره لا يمحى.
33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
34لان الغيرة هي حمية الرجل فلا يشفق في يوم الانتقام.
34ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
35لا ينظر الى فدية ما ولا يرضى ولو اكثرت الرشوة
35அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.