الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

120

1ترنيمة المصاعد‎. ‎الى الرب في ضيقي صرخت فاستجاب لي‎.
1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2‎يا رب نج نفسي من شفاه الكذب من لسان غش‎.
2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.
3‎ماذا يعطيك وماذا يزيد لك لسان الغش‎.
3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
4‎سهام جبار مسنونة مع جمر الرتم‎.
4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5‎ويلي لغربتي في ماشك لسكني في خيام قيدار‎.
5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
6‎طال على نفسي سكنها مع مبغض السلام‎.
6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7‎انا سلام وحينما اتكلم فهم للحرب
7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.