1ترنيمة المصاعد. ارفع عينيّ الى الجبال من حيث ياتي عوني.
1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
2معونتي من عند الرب صانع السموات والارض.
2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
3لا يدع رجلك تزل. لا ينعس حافظك.
3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
4انه لا ينعس ولا ينام حافظ اسرائيل.
4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5الرب حافظك. الرب ظل لك عن يدك اليمنى.
5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
6لا تضربك الشمس في النهار ولا القمر في الليل.
6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
7الرب يحفظك من كل شر يحفظ نفسك.
7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
8الرب يحفظ خروجك ودخولك من الآن والى الدهر
8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.