الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

122

1ترنيمة المصاعد. لداود‎. ‎فرحت بالقائلين لي الى بيت الرب نذهب‎.
1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
2‎تقف ارجلنا في ابوابك يا اورشليم‎.
2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
3‎اورشليم المبنية كمدينة متصلة كلها
3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
4حيث صعدت الاسباط اسباط الرب شهادة لاسرائيل ليحمدوا اسم الرب.
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
5لانه هناك استوت الكراسي للقضاء كراسي بيت داود‎.
5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6‎اسالوا سلامة اورشليم. ليسترح محبوك‎.
6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
7‎ليكن سلام في ابراجك راحة في قصورك‎.
7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
8‎من اجل اخوتي واصحابي لاقولنّ سلام بك‎.
8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
9‎من اجل بيت الرب الهنا التمس لك خيرا
9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.