الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

135

1هللويا. سبحوا اسم الرب. سبحوا يا عبيد الرب
1அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
2الواقفين في بيت الرب في ديار بيت الهنا
2கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
3سبحوا الرب لان الرب صالح. رنموا لاسمه لان ذاك حلو‎.
3கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
4‎لان الرب قد اختار يعقوب لذاته واسرائيل لخاصته‎.
4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
5‎لاني انا قد عرفت ان الرب عظيم وربنا فوق جميع الآلهة‎.
5கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
6‎كل ما شاء الرب صنع في السموات وفي الارض في البحار وفي كل اللجج‎.
6வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
7‎المصعد السحاب من اقاصي الارض. الصانع بروقا للمطر. المخرج الريح من خزائنه‎.
7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
8‎الذي ضرب ابكار مصر من الناس الى البهائم‎.
8அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9‎ارسل آيات وعجائب في وسطك يا مصر على فرعون وعلى كل عبيده‎.
9எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10‎الذي ضرب امما كثيرة وقتل ملوكا اعزاء
10அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
11سيحون ملك الاموريين وعوج ملك باشان وكل ممالك كنعان‎.
11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
12‎واعطى ارضهم ميراثا. ميراثا لاسرائيل شعبه
12அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13يا رب اسمك الى الدهر. يا رب ذكرك الى دور فدور‎.
13கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14‎لان الرب يدين شعبه وعلى عبيده يشفق‎.
14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
15‎اصنام الامم فضة وذهب عمل ايدي الناس‎.
15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
16‎لها افواه ولا تتكلم. لها اعين ولا تبصر‎.
16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17‎لها آذان ولا تسمع. كذلك ليس في افواهها نفس‎.
17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18‎مثلها يكون صانعوها وكل من يتكل عليها‎.
18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
19‎يا بيت اسرائيل باركوا الرب. يا بيت هرون باركوا الرب‎.
19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
20‎يا بيت لاوي باركوا الرب. يا خائفي الرب باركوا الرب‎.
20லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
21‎مبارك الرب من صهيون الساكن في اورشليم. هللويا
21எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.