1هللويا. سبحي يا نفسي الرب.
1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
2اسبح الرب في حياتي. وارنم لالهي ما دمت موجودا
2நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
3لا تتكلوا على الرؤساء ولا على ابن آدم حيث لا خلاص عنده.
3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.
4تخرج روحه فيعود الى ترابه. في ذلك اليوم نفسه تهلك افكاره
4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோகும்.
5طوبى لمن اله يعقوب معينه ورجاؤه على الرب الهه
5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6الصانع السموات والارض البحر وكل ما فيها. الحافظ الامانة الى الابد.
6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7المجري حكما للمظلومين المعطي خبزا للجياع. الرب يطلق الاسرى.
7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.
8الرب يفتح اعين العمي. الرب يقوم المنحنين. الرب يحب الصديقين.
8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
9الرب يحفظ الغرباء. يعضد اليتيم والارملة. اما طريق الاشرار فيعوجه.
9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10يملك الرب الى الابد الهك يا صهيون الى دور فدور. هللويا
10கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.