الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

147

1سبحوا الرب لان الترنم لالهنا صالح لانه ملذ. التسبيح لائق‎.
1கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
2‎الرب يبني اورشليم. يجمع منفيي اسرائيل‎.
2கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3‎يشفي المنكسري القلوب ويجبر كسرهم‎.
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4‎يحصي عدد الكواكب. يدعو كلها باسماء‎.
4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
5‎عظيم هو ربنا وعظيم القوة. لفهمه لا احصاء‎.
5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
6‎الرب يرفع الودعاء ويضع الاشرار الى الارض
6கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
7اجيبوا الرب بحمد. رنموا لالهنا بعود‎.
7கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
8‎الكاسي السموات سحابا المهيئ للارض مطرا المنبت الجبال عشبا
8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
9المعطي للبهائم طعامها لفراخ الغربان التي تصرخ‎.
9அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10‎لا يسر بقوة الخيل. لا يرضى بساقي الرجل‎.
10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
11‎يرضى الرب باتقيائه بالراجين رحمته
11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
12سبحي يا اورشليم الرب سبحي الهك يا صهيون‎.
12எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
13‎لانه قد شدد عوارض ابوابك. بارك ابناءك داخلك‎.
13அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14‎الذي يجعل تخومك سلاما ويشبعك من شحم الحنطة‎.
14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15‎يرسل كلمته في الارض سريعا جدا يجري قوله‎.
15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
16‎الذي يعطي الثلج كالصوف ويذري الصقيع كالرماد
16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17يلقي جمده كفتات. قدام برده من يقف‎.
17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18‎يرسل كلمته فيذيبها. يهب بريحه فتسيل المياه‎.
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19‎يخبر يعقوب بكلمته واسرائيل بفرائضه واحكامه‎.
19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20‎لم يصنع هكذا باحدى الامم. واحكامه لم يعرفوها. هللويا
20அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.