الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

148

1هللويا. سبحوا الرب من السموات سبحوه في الاعالي‎.
1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
2‎سبحوه يا جميع ملائكته سبحوه يا كل جنوده‎.
2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
3‎سبحيه يا ايتها الشمس والقمر سبحيه يا جميع كواكب النور‎.
3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
4‎سبحيه يا سماء السموات ويا ايتها المياه التي فوق السموات‎.
4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
5‎لتسبح اسم الرب لانه امر فخلقت‎.
5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
6‎وثبتها الى الدهر والابد. وضع لها حدا فلن تتعداه
6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
7سبحي الرب من الارض يا ايتها التنانين وكل اللجج‎.
7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,
8‎النار والبرد الثلج والضباب الريح العاصفة الصانعة كلمته
8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
9الجبال وكل الآكام الشجر المثمر وكل الارز
9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
10الوحوش وكل البهائم الدبابات والطيور ذوات الاجنحة
10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
11ملوك الارض وكل الشعوب الرؤساء وكل قضاة الارض
11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
12الاحداث والعذارى ايضا الشيوخ مع الفتيان
12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
13ليسبحوا اسم الرب لانه قد تعالى اسمه وحده. مجده فوق الارض والسموات‎.
13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
14‎وينصب قرنا لشعبه فخرا لجميع اتقيائه لبني اسرائيل الشعب القريب اليه. هللويا
14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.