الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

83

1تسبيحة. مزمور لآساف‎. ‎اللهم لا تصمت لا تسكت ولا تهدأ يا الله‎.
1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
2‎فهوذا اعداؤك يعجون ومبغضوك قد رفعوا الراس‎.
2இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
3‎على شعبك مكروا مؤامرة وتشاوروا على أحميائك‎.
3உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
4‎قالوا هلم نبدهم من بين الشعوب ولا يذكر اسم اسرائيل بعد
4அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
5لانهم تآمروا بالقلب معا. عليك تعاهدوا عهدا‎.
5இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,
6‎خيام ادوم والاسمعيليين . موآب والهاجريون‎.
6கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
7‎جبال وعمون وعماليق. فلسطين مع سكان صور‎.
7ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
8‎اشور ايضا اتفق معهم. صاروا ذراعا لبني لوط. سلاه‎.
8அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா)
9‎افعل بهم كما بمديان كما بسيسرا كما بيابين في وادي قيشون‎.
9மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
10‎بادوا في عين دور. صاروا دمنا للارض‎.
10நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
11‎اجعلهم شرفاءهم مثل غراب ومثل ذئب. ومثل زبح ومثل صلمناع كل امرائهم‎.
11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
12‎الذين قالوا لنمتلك لانفسنا مساكن الله
12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13يا الهي اجعلهم مثل الجل مثل القش امام الريح‎.
13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
14‎كنار تحرق الوعر كلهيب يشعل الجبال
14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
15هكذا اطردهم بعاصفتك وبزوبعتك روعهم‎.
15நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
16‎املأ وجوههم خزيا فيطلبوا اسمك يا رب‎.
16கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
17‎ليخزوا ويرتاعوا الى الابد وليخجلوا ويبيدوا
17யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
18ويعلموا انك اسمك يهوه وحدك العلي على كل الارض
18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.